செய்திகள் :

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும்வரை கூட்டணியை ஏற்க மாட்டோம்: டிடிவி தினகரன்

post image

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும்வரை கூட்டணியை ஏற்க மாட்டோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ”இந்த முறை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி முத்திரை பதிக்கும். நாங்கள் உறுதியாக சொல்கிறேன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இடம் பிடிக்கின்ற கூட்டணி, ஆட்சி அமைக்கும்.

நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். அதற்கான அர்த்தத்தை மே மாதம் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி இருக்கும் வரை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை” என அவர் தெரிவித்தார்.

பத்து நாள்கள் செங்கோட்டையன் கெடு விதித்தது தொடர்பான கேள்விக்கு, ”அது செங்கோட்டையன் விவகாரம், அதற்கு பதில் அவரே தருவார்” என்றார்.

இபிஸ்ஸின் தில்லி பயணம் தொடர்பான கேள்விக்கு, ”தில்லி செல்வது, அவருடைய விஷயம். அவர் செல்கிறார்” என்றார்.

இதையும் படிக்க: வக்ஃப் சட்டம்: ஆட்சியர் அதிகாரம் உள்பட சில விதிகளுக்கு இடைக்காலத் தடை!

TTV Dinakaran has said that they will not accept an alliance as long as EPS is the Chief Ministerial candidate.

வக்ஃபு சட்டம்: முக்கியத் திருத்தங்களுக்குத் தடை - முதல்வர் வரவேற்பு

வக்ஃபு சட்டத் திருத்தம் தொடர்பான, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவி... மேலும் பார்க்க

பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது: வழக்குரைஞர் பாலு

பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்று அன்புமணி வழக்குரைஞர் பாலு தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல்... மேலும் பார்க்க

பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். ... மேலும் பார்க்க

விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட வேண்டாம்: சி. விஜயபாஸ்கர்

எம்ஜிஆர் ஒரு மகத்தான தலைவர், அவரை யாருடன் ஒப்பிட வேண்டாம் என்று விஜய் குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார். புதுக்கோட்டையில் திங்கள்கிழமை காலை அண்ணா சிலைக்கு மா... மேலும் பார்க்க

அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால்...! - ஓபிஎஸ் பேட்டி

அதிமுக தலைவர்கள் கட்சியை ஒன்றிணைக்கவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து செய்வார்கள் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா... மேலும் பார்க்க

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை: முதல்வர் தொடக்கி வைத்தார்!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 15) தொடக்கி வைத்தார்.தமிழக அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோா் இ... மேலும் பார்க்க