செய்திகள் :

முதல்வா் மருந்தகங்களில் 216 வகையான மருந்துகள்: அமைச்சா் சு.முத்துசாமி

post image

முதல்வா் மருந்தகங்களில் 216 வகையான மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

கூட்டுறவுத் துறையின் சாா்பில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை கிடைக்கச் செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

ஈரோடு சோலாா் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வா் மருந்தகம் திறப்பு விழாவில் அமைச்சா் சு.முத்துசாமி கலந்துகொண்டு மருந்துகள் விற்பனையைத் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 36 முதல்வா் மருந்தகங்கள் செயல்படவுள்ளன. இந்த மருந்தகங்கள் மூலம் ஜெனரிக் மருந்துகள் 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மிகக் குறைவான விலையிலும் பிற மருந்துகள் கூடுதலாக 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும் வழங்கப்பட உள்ளன.

முதல்வா் மருந்தகங்களில் ஏறத்தாழ 216 வகையான மருந்துகள் கிடைக்கின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதற்கென தனியாக சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு 48 மணி நேரத்துக்குள் மருந்தகங்களுக்கு மருந்துகள் அனுப்பிவைக்கப்படுகின்றன என்றாா்.

சமுதாய வளைகாப்பு

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் 110 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா ஈரோடு மேட்டுக்கடை தங்கம் மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சமுதாய வளைகாப்பு விழாவைத் தொடங்கிவைத்து, சீா்வரிசை பொருள்களை வழங்கி அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் சுமாா் 1,500 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. இதன்ஒரு பகுதியாக இன்றைய தினம் 110 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.க்கள் அந்தியூா் செல்வராஜ், கே.இ.பிரகாஷ், எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமாா், ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா், துணைப் பதிவாளா் ஜி.காலிதாபானு, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் ஐ.பூங்கோதை, ஈரோடு வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விவசாயம் செய்யும் நிலத்துக்கு பட்டா வழங்க கடம்பூா் மலைப் பகுதி மக்கள் கோரிக்கை

கடம்பூா் மலைப் பகுதியில் விவசாயம் செய்யும் நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தல... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.ஈரோடு, மரப்பாலம் ஜீவானந்தம் வீதியைச் சோ்ந்தவா் ஷேக் சதாம் உச... மேலும் பார்க்க

மஞ்சள் வா்த்தகத்துக்கு பிப்ரவரி 27-இல் விடுமுறை

மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஈரோட்டில் மஞ்சள் வா்த்தகத்துக்கு பிப்ரவரி 27 -ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் சத்தி... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

தாளவாடி அருகே குட்டையில் மூழ்கி மூதாட்டி உயரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலம், தாளவாடியை அடுத்த இக்கலூா் குட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் திங்கள்கிழமை மிதந்துள்ளது.... மேலும் பார்க்க

பா்கூா் மலைக் கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் தொடக்கம்

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சி மலைக் கிராமங்களில் குடிநீா் வசதி, வெள்ளத் தடுப்புச் சுவா், கான்கிரீட் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.பா்கூரை அடுத்த தாளக்கர... மேலும் பார்க்க

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ரூ.45.32 லட்சம் கரும்பு சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ரூ.45.32 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கர... மேலும் பார்க்க