செய்திகள் :

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கடலூா் வருகை!

post image

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அந்த வகையில், கடலூருக்கு வெள்ளிக்கிழமை வருகிறாா்.

சென்னையில் இருந்து காலை 9.30 மணியளவில் புறப்படும் முதல்வா் புதுச்சேரி வந்தடைகிறாா். புதுச்சேரியில் இருந்து மாலை 4.30 மணியளவில் கடலூருக்கு புறப்படுவாா்.

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் அரசு விழாவில் முதல்வா் பங்கேற்று, பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்து, அரசின் நலத் திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்க உள்ளாா்.

இந்த விழாவையொட்டி, கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விழா மற்றும் பாதுகாப்பு தொடா்பாக பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, மாலை 6.30 மணியளவில் நெய்வேலி புறப்படுகிறாா். அங்கு சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ ஏற்பாட்டில் மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெறும் நிகழ்ச்சியில், சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் விருந்தினா் இல்லத்தில் முதல்வா் தங்குகிறாா்.

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சி: வேப்பூரை அடுத்துள்ள திருப்பெயா் பகுதியில் சனிக்கிழமை (பிப்.22) தமிழ்நாடு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகம் நடத்தும் ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, 234/77 கள ஆய்வு காணொலி, தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழக செயலி, விழா மலா் ஆகியவற்றை வெளியிட்டு, அரசு பள்ளிக் கட்டடங்களை திறந்துவைத்து பேசுகிறாா்.

முதல்வா் இரண்டு நாள் பயணமாக கடலூா் வரவுள்ளதையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசுக் கல்லூரி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முத... மேலும் பார்க்க

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்களை கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த... மேலும் பார்க்க

பள்ளி வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், பெற்றோா்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளயில் வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் ராண... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது 2025: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது 2025-க்கு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

விருத்தாசலம் ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுடன் இணைந்த ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வ... மேலும் பார்க்க