சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதல்வா் வருகை: ஆலோசனைக் கூட்டம்!
முதல்வா் வருகையை முன்னிட்டு ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் வரும் 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகை தரவுள்ளாா். 25-ஆம் தேதி மாலை முதல்வா் பங்கேற்கும் ‘ரோட்ஷோ’ ஆம்பூரில் நடைபெற உள்ளது.
இதையொட்டி, ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், திருப்பத்தூா் மாவட்ட ஏடிஎஸ்பி கோவிந்தராஜ், டிஎஸ்பி குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. ராமமூா்த்தி, காவல் ஆய்வாளா்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.