செய்திகள் :

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன்... ரத்து செய்ய கோரிய நடிகையின் மனு தள்ளுபடி

post image

கடந்த அ தி மு க ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் ராமநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதுடன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கர்ப்பமான தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் `நாடோடிகள்' பட நடிகை சாந்தினி புகார் கூறியிருந்தார்.

நடிகை சாந்தினி
நடிகை சாந்தினி

இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு மணிகண்டன் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த அவரை பெங்களூரில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து நடிகை சாந்தினி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

3 ஆண்டுகளுக்கு பின் நேற்று இந்த மனு நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர், கடந்த 2022ம் ஆண்டில் இந்த வழக்கில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர். அதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் மணிகண்டன் மீது பதிவு செய்திருந்த வழக்கினை ரத்து செய்ததாகவும் கூறினார்.

இதனை மறுத்த நடிகை சாந்தினியின் வழக்கறிஞர், பாலியல் குற்ற வழக்குகளில் சமரசம் கிடையாது. அப்படி சமரசம் ஏதும் செய்து கொள்ளவில்லை என்றார். இதனை கேட்ட நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மனுதாரர் தரப்பு ஏன் அப்போதே மனு தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பியதுடன் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக சாந்தினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும் நடிகை சாந்தினி தொடர்ந்த இந்த வழக்கானது கடந்த 3 ஆண்டுகளாக ஏன் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்பதை உச்ச நீதிமன்ற பதிவாளர் விளக்க அறிக்கையாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டு வருகிறார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன். இந்நிலையில் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி தொடர்ந்த ஜாமீன் வழக்கினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது அவருக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளதாக அவர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

பாமக: "ஏன் பொய் சொன்னோம் என்று வருந்தும் அளவுக்கு நடவடிக்கை எடுப்போம்" - ராமதாஸ் உறுதி

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் போக்கு முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது.ராமதாஸ் அனுமதி இல்லாமல், அன்புமணி ஒரு பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, ராமதாஸிற்கு நாற்கா... மேலும் பார்க்க

மால்டோவாவை ஆக்கிரமிக்க ஐரோப்பா திட்டமா? - ரஷ்யா குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டோவாவை மேற்குலக நாடுகள் ஆக்கிரமிக்கப் போவதாகவும் அதற்கான நேட்டோவின் படை உக்ரைனின் ஒடெசா பிராந்தியத்துக்கு வர தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளிநாட்டு உளவு அமைப்பு (SVR) தெரிவ... மேலும் பார்க்க

டொனால்டு ட்ரம்ப் ஒரு இலுமினாட்டி! - இப்படி சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

டொனால்ட் ட்ரம்ப் ஒரு இலுமினாட்டி என்றால் நீங்கள் நம்புவீர்களா? இலுமினாட்டி எனும் சதிகோட்பாட்டை நம்புபவர்கள் கூட ட்ரம்பை இலுமினாட்டி சங்கத்தின் உறுப்பினர் என நம்ப மாட்டார்கள் .எப்படி ட்ரம்பை இலுமினாட்ட... மேலும் பார்க்க

Trump: ``ட்ரம்புக்கு நோபல் பரிசு வேண்டுமாம், இதை செய்தால் கிடைக்கும்" - பிரான்ஸ் அதிபரின் ட்விஸ்ட்

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து வரும் போரில், 65000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம் காரணமாக உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் உலக... மேலும் பார்க்க

அண்ணாமலையுடன் பேசியது என்ன? - டிடிவி தினகரன் விளக்கம்

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனைச் சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் பேசுபொருளானது. இந்நிலையில் இன்று (செப். 24) செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ட... மேலும் பார்க்க

கோவை: திமுகவுக்கு `டாடா' சொன்ன முன்னாள் ஊராட்சித் தலைவர்; தட்டித் தூக்கிய பாஜக, செந்தில் பாலாஜி ஷாக்

கொங்கு மண்டலம்தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் என்றால் வியூகங்கள் இருப்பது வழக்கம். அதில் மாற்றுக் கட்சியினரை தங்களின் கட்சிக்கு... மேலும் பார்க்க