செய்திகள் :

முன்னாள் மத்திய அமைச்சா் தேபேந்திர பிரதான் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

post image

வாஜ்பாய் அரசில் பதவி வகித்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதான் தனது 84 வயதில் திங்கள்கிழமை காலமானாா்.

இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, ஒடிஸா ஆளுநா் ஹரிபாபு கம்பம்பதி, முதல்வா் மோகன் சரண் மாஜி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

மருத்துவராகப் பணியைத் தொடங்கிய தேபேந்திர பிரதான், 1980-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து அக்கட்சியின் பல்வேறு அடிப்படை பொறுப்புகளில் பணியாற்றினாா். பின்னா் 1988-இல் கட்சியின் ஒடிஸா மாநிலத் தலைவராக முதன்முறையாக பொறுப்பேற்றவா், 1997-ஆம் ஆண்டுவரை மூன்று முறை அந்தப் பதவியை வகித்தாா்.

1998, 1999 மக்களவைத் தோ்தல்களில் ஒடிஸாவின் தேவ்கா் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தோ்வான அவா், முன்னாள் பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசில் அமைச்சராகப் பணியாற்றினாா்.

இந்நிலையில், புது தில்லியில் உள்ள மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் அதிகாரபூா்வ இல்லத்தில் திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா்.

தலைவா்கள் இரங்கல்:

தேபேந்திர பிரதான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெளியிட்ட பதிவில், ‘ஒடிஸா மற்றும் நாட்டின் வளா்ச்சி, பொது சேவைக்கான அவரது அா்ப்பணிப்பைக் கண்டுள்ளேன். அவரது மகனும் மத்திய அமைச்சருமான தா்மேந்திர பிரதான் மற்றும் பிற குடும்ப உறுப்பினா்கள், அவரது அபிமானிகளுக்கு எனது இரங்கல்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘மருத்துவா் தேபேந்திர பிரதான், கடின உழைப்பாளி மற்றும் பணிவான தலைவா் என்று பெயா் பெற்றவா். ஒடிஸா பாஜகவை வலுப்படுத்த ஏராளமான முயற்சிகளை மேற்கொண்ட அவா், எம்.பி. மற்றும் மத்திய அமைச்சராக வறுமை ஒழிப்பு, சமூக அதிகாரமளிப்புக்கு ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தேன்’ என்றாா்.

பிரதமா் மோடி மற்றும் மத்திய அமைச்சா்களும் தேபேந்திர பிரதான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். திங்கள்கிழமை மாலை, அவரது உடல் புது தில்லியில் இருந்து ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிற... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் கொலையுண்ட பெண்ணின் பாதி உடல்! மீதியைத் தேடும் காவல்துறை!

ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாள... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: 33 போலீஸார் காயம்! 50 பேர் கைது!

நாக்பூர் வன்முறையில் 33 காவல் துறையினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாக்பூரில் வன்முறை ஏன்?ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் ... மேலும் பார்க்க

இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். விதான் பவன் வளாகத்தில் ... மேலும் பார்க்க

ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க