செய்திகள் :

மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்தது! இடிபாடுகளில் 7 பேர்?

post image

மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது.

இதுவரை இடிபாடுகளில் இருந்து 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 7 பேர் சிக்கியிருக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் 3 மாடிக் கட்டடத்தின் ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை காலை மணியளவில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது.

இதனால், கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 20 -க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தில்லி காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 7 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்ற தகவலின் அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை உயிரிழப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.

A three-story building collapsed in Mumbai on Friday morning.

இதையும் படிக்க : பிரிட்டனில் வாக்களிக்கும் வயது 16 ஆகக் குறைக்கத் திட்டம்!

இந்து, பெளத்த, சீக்கியரைத் தவிர பிறரின் எஸ்சி சான்றிதழ் ரத்து: ஃபட்னவீஸ்

இந்து, பெளத்த, சீக்கிய மதங்களைத் தவிர மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் போலியாக எஸ்சி சான்றிதழ் பெற்றிருந்தால் அவை ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.அரசு வேலைகள்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் ரயில் மோதியதில் 3 யானைகள் பலி !

மேற்கு வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இரண்டு கன்றுகள் உள்பட 3 யானைகள் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தாலா ரயில் நில... மேலும் பார்க்க

கேரள முன்னாள் முதல்வருடன் ராகுல் காந்தி சந்திப்பு!

கேரளத்தின் முன்னாள் முதல்வர் ஏ.கே. அந்தோனியை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திருவனந்தபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (ஜூலை 18) நேரில் சந்தித்துள்ளார்.கோட்டயம் மாவட்டத்தில், முன்னாள்... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் கைது !

மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 முதல் 2022 வரையிலான ஆட்சிக்காலத்தில் பூபேஷ் பாகேல் தலைமையிலா... மேலும் பார்க்க

அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இல்லை: சஞ்சய் சிங்

மக்களவைத் தேர்தலுக்குப் பின், இந்தியா கூட்டணியில், ஆம் ஆத்மி கட்சி அங்கம் வகிக்கவில்லை என்று கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை ஆம் ஆத்மி, காங்கிரஸ் க... மேலும் பார்க்க

கூகுள் தேடலில் செய்யறிவு(ஏஐ)! - பயன்படுத்துவது எப்படி?

பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் செய்யறிவு தொழில்நுட்பத்தை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் ஒரு பகுதியாக தற்போது அனைத்துத் துறைகளிலும் ஏ.ஐ. எனும்... மேலும் பார்க்க