செய்திகள் :

மும்பை அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகுகிறாரா?

post image

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் ரஞ்சி கோப்பையில் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை மும்பை கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது.

ரஞ்சி கோப்பையில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை அணியில் இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்குமார் யாதவ் இடம்பெற்று விளையாடி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், அந்த அணியிலிருந்து விலகவுள்ளதாக வெளியான தகவல் கிரிக்கெட் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்! கோவா அணி கேப்டனாகிறாரா?

மும்பை கிரிக்கெட் சங்கம் மறுப்பு

மும்பை அணியில் உள்ள வீரர்கள் சிலருடன் இணைந்து கோவா அணிக்கு சூர்யகுமார் யாதவ் செல்லவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மும்பை அணியை விட்டு சூர்யகுமார் யாதவ் எங்கும் செல்லவில்லை எனவும், மும்பை அணிக்காக விளையாடுவதையே அவர் விரும்புகிறார் எனவும் மும்பை கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்க செயலர் அபய் ஹதாப் கூறியதாவது: மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் விழிப்புணர்வுடன் இருக்கிறது. மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகள் சூர்யகுமார் யாதவிடம் பேசினார்கள். அவரிடம் பேசிய பிறகு, சமூக வலைதளங்களில் பரவியது வதந்தி என்பதும், முழுவதும் ஆதாராமற்ற செய்தி என்பதையும் உறுதிப்படுத்தினோம். மும்பை அணிக்காக விளையாடுவதில் சூர்யகுமார் யாதவ் மிகுந்த பெருமைப்படுகிறார். அதனால், தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

இதையும் படிக்க: கோப்பையை வெல்வது மட்டும் மீதமிருக்கிறது: நிதீஷ் குமார் ரெட்டி

முன்னதாக, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடவிருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐசிசியின் மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார்.சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு ஐசிசியின் சார்பில் விருது வழங்கப்பட்ட... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்தார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கேதர் ஜாதவ் ஐபிஎல் சென்னை, பெங்களூரு அணிகளுக்கு விளையாடியதன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். சர்... மேலும் பார்க்க

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் விலகல்!

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மைக் ஹெசன் கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். அதன் பின... மேலும் பார்க்க

27 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் புக்கோவ்ஸ்கி! பந்து தாக்கியதில் நிலைகுலைந்தவர்!

கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கியதில் நிலைகுலைந்த ஆஸ்திரேலிய அணி வீரர் வில் புக்கோவ்ஸ்கி, மூளையதிர்ச்சி காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் கிரிக்கெட்டில் இருந்து நிரந்தரமாக விடைபெற்றார்... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிரணி அறிவிப்பு!

முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான மகளிரணியை பிசிசிஐ இன்று (ஏப்ரல் 8) அறிவித்துள்ளது.இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் இம்மாத இறுதியில் தொடங்கவுள... மேலும் பார்க்க

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர்!

நீண்ட நாள் காதலியான மோனிகாவைக் கரம்பிடித்தார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர்.ஆஸ்திரேலிய மகளிர் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஆஷ்லே கார்ட்னர், தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்து ... மேலும் பார்க்க