செய்திகள் :

மும்பை: சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசத்தினர்; ஒப்பந்தாரர்களுக்கு அரசு எச்சரிக்கை; பின்னணி என்ன?

post image

மகாராஷ்டிராவில் குறிப்பாக மும்பை, புனே போன்ற நகரங்களில் ஏராளமான பங்களாதேஷ் பிரஜைகள் சட்டவிரோதமாகக் குடியேறி கட்டுமானத்தொழில், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்றவற்றில் வேலை செய்து வருகின்றனர்.

அவர்கள் தங்களை இந்தியர்கள் என்று நிரூபிக்க, போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்து தேவையான ஆவணங்களை வாங்கி விடுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அது போன்று சட்டவிரோதமாக மும்பைக்கு வந்த பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர்தான் நடிகர் சைஃப் அலிகான் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றதோடு நடிகரை பிளேடால் தாக்கி காயப்படுத்தினார்.

அவரை போலீஸார் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். இதையடுத்து பங்களாதேஷ் பிரஜைகளின் வரவைக் கட்டுப்படுத்த மாநில அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து இருக்கிறது.

வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், ''பங்களாதேஷ் பிரஜைகளைத் தொழில் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் யாராவது வேலைக்கு அமர்த்தி இருந்தால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கருதி தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பல ஊடுருவல்காரர்களை கட்டுமான நிறுவனங்கள், சிறு மற்றும் பெரிய தொழில்கள், வர்த்தகர்கள் மற்றும் பிற பொருளாதார நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதை இந்த நிறுவனங்கள் புரிந்து கொள்ள தவறிவிடுகின்றன. சட்டவிரோதமாக வரும் பங்களாதேஷ் பிரஜைகள் அரசின் நலத்திட்டங்களையும் வாங்கிக்கொள்கின்றனர்.

அவர்கள் கொடுக்கும் ஆவணங்கள் உண்மையானதா என்பதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிபடுத்தவேண்டும்" என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற ஊடுருவல்காரர்கள் போலி ஆவணங்கள் பெற உதவி செய்யும் அதிகாரிகள் மீது கடும் நட்வடிக்கை எடுக்கப்படும்' என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் மாநில உள்துறை இணையமைச்சர் யோகேஷ் கதம் சட்டமன்றத்தில் அளித்த பதிலில், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பில்டர்கள் பங்களாதேஷ் பிரஜைகளை வேலைக்கு அமர்த்தமாட்டோம் என்று எழுதி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விவாகரத்தில் ரூ.5 கோடி பெற்ற பெண்ணிடம், திருமண ஆசைகாட்டி ரூ.3.60 கோடி மோசடி செய்த இளைஞர்

புனேயை சேர்ந்த பெண் ஒருவரை லக்னோவை சேர்ந்த நபர் திருமண ஆசை காட்டி ரூ. 3.60 கோடியை மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த 35 வயது பெண் தனது முதல் கணவரை விவாகரத்து செய... மேலும் பார்க்க

Tiger Death: மாட்டிறைச்சியில் பூச்சி மருந்து.. துடிதுடித்து மடிந்த 5 புலிகள்; வனத்தில் என்ன நடந்தது?

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டதில் உள்ள மலே மாதேஸ்வரா வனப்பகுதியில் நேற்று முன்தினம் 5 புலிகள் ஒரே இடத்தில் இறந்துக் கிடப்பதைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். தாய்புலி மற... மேலும் பார்க்க

தெலங்கானா: வண்டியில் GPS; காதலன், தாய் செய்த உதவி; கணவனைக் கொன்ற மனைவி கைது; விசாரணையில் பகீர் தகவல்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகில் உள்ள கட்வால் என்ற இடத்தைச் சேர்ந்த தேஜஸ்வருக்குக் கடந்த மே 18ம் தேதிதான் ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தேஜஸ்வர் திடீரென காணாமல் ... மேலும் பார்க்க

தேனி: திமுக கவுன்சிலர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு; பின்னணி என்ன?

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ராமசாமி. திமுக-வைச் சேர்ந்த தேனி வடக்கு நகர பொறுப்பாளரும், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்றத் தலைவர் ரேணுபிரியாவ... மேலும் பார்க்க

Ooty: பரிகாரம் எனச் சொல்லி பக்தர் நெற்றியில் கத்திக்குத்து; சாமியார் சிறையில் அடைப்பு; என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதான சிவகுமார். தன்னைச் சாமியார் என அறிவித்துக் கொண்ட சிவக்குமார், வீட்டிற்குள் சாமி சிலை ஒன்றை வைத்து மக்களு... மேலும் பார்க்க

கொல்கத்தா: "காலில் விழுந்து கெஞ்சியும் விடவில்லை" - பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கல்லூரி மாணவி

கொல்கத்தாவில் கடந்த புதன் கிழமை இரவு தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் கொல்கத்தாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது... மேலும் பார்க்க