செய்திகள் :

மும்பை தாண்டியா நடனம்: 'பங்கேற்பவர்கள் மீது கோமியம் தெளிப்போம்' - VHPயின் கட்டுப்பாடுகளால் சர்ச்சை

post image

நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. இந்த நவராத்திரி விழாவில் தாண்டியா நடனம் மிகவும் பிரபலம் ஆகும். வட இந்தியாவில் இந்த நடனம் மிகவும் பிரபலம் என்றாலும் தமிழ் நாட்டிலும் வட இந்தியர்கள் இந்த நடனத்தை 9 நாட்களும் ஆடுகின்றனர்.

மும்பையில் இந்த நடனத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் அதிக அளவில் பங்கேற்பது வழக்கம். இந்த தாண்டியா நடனத்தில் பங்கேற்பவர்களுக்கு விஷ்வ இந்து பரிஷத் சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.

இது குறித்து அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஸ்ரீராஜ் நாயர் அளித்த பேட்டியில், ''தாண்டியா நடனம் என்பது வெறும் நடனம் மட்டுமல்ல, தெய்வத்தை மகிழ்விப்பதற்கான ஒரு வழிபாட்டு முறை.

அவர்கள் (முஸ்லிம்கள்) சிலை வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. சடங்குகளில் நம்பிக்கை உள்ளவர்களை மட்டுமே தாண்டியா நடனத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும்.

தாண்டியா நடனம்
தாண்டியா நடனம்

தாண்டியா நடனத்தில் பங்கேற்பவர்கள் நெற்றியில் திலகம் இட்டு இருக்கவேண்டும். புனித கயிறு கட்டி இருக்கவேண்டும். இந்து கடவுள்களை வழிபட்டுவிட்டுத்தான் நடனத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். நடனத்தில் பங்கேற்பவர்கள் மீது கோமியம் தெளிக்கப்படும்.

இந்த விதிகள் நவராத்திரி விழாக்களில் பின்பற்றப்படுகிறதா என்பதை விஷ்வ இந்து பரிஷ்த் மற்றும் பஜ்ரங் தள தொண்டர்கள் கண்காணிக்கவேண்டும். இதில் இந்துக்கள் மட்டுமே பங்கேற்பதை உறுதி செய்யவேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது போன்ற நிபந்தனைகளை விதித்து சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்த வி.எச்.பி முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

நவராத்திரி மண்டல்கள் தாண்டியா நடனத்தில் யார் பங்கேற்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று மகாராஷ்டிரா அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ''ஒவ்வொரு தாண்டியா குழுவும் சில விதிகளை தங்களுக்குள் உருவாக்கி இருக்கின்றன. அதைச் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு'' என்று கூறினார்.

தாண்டியா நடனம்
தாண்டியா நடனம்

இது குறித்து சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவுத் அளித்த பேட்டியில், ''ஒரு வகுப்புவாத சூழலை உருவாக்குவதுதான் அவர்களின் வேலை. நான் அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை பற்றிப் பேசவில்லை, ஆனால் இந்த விஷம் பரப்பப்படும் விதம் மகாராஷ்டிராவுக்கோ அல்லது நாட்டிற்கோ ஏற்புடையதல்ல" என்று அவர் கூறினார்.

பா.ஜ.க மற்றும் அதன் கிளை அமைப்புகள் அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஆந்திரா: தன்னைக் கடித்த பாம்பை போதையில் திரும்பக் கடித்துத் துப்பிய நபர்; உயிருக்குப் போராடும் சோகம்

ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி அருகில் இருக்கும் சிய்யாவரம் என்ற கிராமத்தில் குடிபோதையில் ஒருவர் செய்த காரியம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.அக்கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவ... மேலும் பார்க்க

ஜப்பான்: தன் மகனை விட 6 வயது இளையவரை மணந்த 63 வயது பெண்; எப்படி மலர்ந்தது இந்தக் காதல்?

63 வயதான ஜப்பானியப் பெண் ஒருவர் தனது மகனை விட ஆறு வயது இளையவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.அசராஷி என்ற அந்த 63 வயதான பெண்மணி, தனது 48 வயதில் விவாகரத்து பெற்று, தனது குழந்தையை ஒற்றைத் தாயாக வளர்த்து... மேலும் பார்க்க

ஆப்கான் சிறையில் பிரிட்டன் தம்பதி; ஐநா எச்சரிக்கை; கத்தார் பேச்சுவார்த்தை; விடுதலையான பின்னணி என்ன?

ஆப்கானிஸ்தானில் சுமார் 8 மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த வயதான தம்பதியினர், கத்தார் நாட்டின் முயற்சிகளைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆ... மேலும் பார்க்க

"மின்சாரம் பயன்படுத்தி எப்படி வாழ்கிறீர்கள்?"- அதிசய மூதாட்டி எழுப்பிய கேள்வி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் பேராசிரியர் ஹேமா சென் (85). இவர் 1962 முதல் 2000-ம் ஆண்டு ஓய்வு பெறும் வரை புனேவில் உள்ள அபாசாஹேப் கார்வாரே கல்லூரியில் தாவரவியல் பாடம் நடத்தி வந்தார். 'தாவரங்க... மேலும் பார்க்க

வகுப்பு மேசைகளில் 'ரோலர் கோஸ்டர்' பார்; வைரலாகும் சீனப் பள்ளிகளின் புகைப்படம் - பின்னணி என்ன?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள் அதிக நேரம் செல்போன், கணினி போன்ற மின்னணு திரைகளைப் பார்ப்பதால், அவர்களின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, கிட்டப்பார்வை குறைபாடு உலகளவில் குழந்த... மேலும் பார்க்க

'எனக்கு 6க்கு 4தான் கிடைத்தது': 2 பூரி கேட்டு நடுரோட்டில் உட்கார்ந்து அழுது போராட்டம் நடத்திய பெண்

பானிப்பூரி வட இந்தியாவில் மிகவும் பிரபலம். அதற்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். மாலையாகிவிட்டால் அப்படியே கூட்டமாகச் சென்று பானிப்பூரி சாப்பிடுவது வழக்கம். குஜராத் மாநிலத்தில் 2 பானிப்பூரி குறைவாக... மேலும் பார்க்க