செய்திகள் :

மும்பை: `நான் ஏன் மராத்தி பேசவேண்டும்?' - வாடிக்கையாளரிடம் ஏர்டெல் ஊழியர் வாக்குவாதம், சர்ச்சை

post image

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்.மூத்த தலைவர் பையாஜி ஜோஷி மும்பையில் அளித்திருந்த பேட்டியில், `மும்பையில் வாழ மராத்தி தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார். இதற்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பையாஜி ஜோஷி தனது கருத்துக்கு விளக்கம் கொடுத்து இருந்தார்.

இப்போது தென்னிந்தியாவில் மொழிப்பிரச்னை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசும் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது. மும்பையில் மராத்தி ஆட்சி மொழியாக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களும் வசிப்பதால் அதிக அளவில் மராத்தி பேசப்படுவதில்லை. இந்தியே பிரதானமாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள ஏர்டெல் சேவை மையத்திற்கு மராத்தி வாடிக்கையாளர் ஒருவர் சென்று அங்கிருந்த பெண் ஊழியரிடம் மராத்தியில் பேசியிருக்கிறார்.

உடனே அந்த பெண் ஊழியர், பதிலுக்கு இந்தியில் பேசியிருக்கிறார். வாடிக்கையாளர் அதற்கு மராத்தியில் பேசும்படி கேட்டுக்கொண்டார். உடனே அந்த பெண் ஊழியர், `மராத்தி எனக்கு முக்கியம் கிடையாது. நாம் இந்துஸ்தானில் வசிக்கிறோம். யாரும் எந்த மொழியும் பேசலாம். நான் ஏன் மராத்தி பேசவேண்டும். மகாராஷ்டிராவை நீங்கள் வாங்கி இருக்கிறீர்களா? அல்லது மகாராஷ்டிரா உங்களுக்கு சொந்தமா. நான் எங்கு வேலை செய்யவேண்டும் எங்கு வேலை செய்யக்கூடாது என்று சொல்வீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.

வாடிக்கையாளர் பதிலுக்கு, `நீங்கள் எனது பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. அதோடு சரியாக பேசவும் இல்லை’ என்று கூறினார். பெண் ஊழியர் சத்தம் போட்டுள்ளார். எனினும் வாடிக்கையாளரின் குறையையும் தீர்த்து வைக்கவைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

`மராத்தி தெரிந்திருக்கவேண்டும்’

இருவரும் பேசியதை ஒருவர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி இருக்கிறது. இது குறித்து பா.ஜ.க சட்டமேலவை உறுப்பினர் சித்ரா வாக் ஏர்டெல் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில், ''ஒருவர் மகாராஷ்டிராவில் வசித்தால் அவர் கட்டாயம் மராத்தி தெரிந்திருக்கவேண்டும். மராத்தி தெரிந்திருக்கவில்லையெனில் தெரிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டும். மராத்திக்கு மரியாதை கொடுக்கவேண்டும். ஏர்டெல் கேலரியில் ஒரு பெண் ஊழியர் "ஆணவமும் முரட்டுத்தனமும்" காட்டி இருக்கிறார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உங்கள் கேலரிகளில் உள்ள ஒவ்வொரு மேலாளரும் பணியாளரும் மராத்தியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆட்சேர்ப்பின் போது மராத்தி மொழி சரளமாகத் தெரிந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று அவர் அனுப்பிய செய்தியில் கூறினார். இதனிடையே, நடந்த நம்பவம் துரதிஷ்டவசமானது என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

”இந்தி ஈஸியான மொழி; இந்தி தெரிந்தால் அனைத்து மாநிலங்களையும் தொடர்பு கொள்ளலாம்” - டி.டி.வி.தினகரன்

தஞ்சாவூரில் அ.ம.மு.க நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, "முன்னாள் அமைச்சர் வைத்திலிங... மேலும் பார்க்க

Immigration and Foreigners Bill: குடியேறிகளுக்குப் புதிய மசோதா கொண்டு வந்த பாஜக அரசு | முழு விவரம்

Immigrants எனப்படும் குடியேறிகள் தொடர்பாக மத்திய அரசு புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா குறித்து விரிவாகக் காணலாம்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத... மேலும் பார்க்க

`தென் மாவட்டங்களில் சாதி ரீதியான கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன’ - திருமாவளவன்

நெல்லை செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், "திமுக ஆட்சியை அகற்ற யாருடனும் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூ... மேலும் பார்க்க

TN Budget: தனிநபர் வருமானம் டு மாநில ஜிஎஸ்டிபி - பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு பட்ஜெட் நாளை (மார்ச் 14) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024 – 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச... மேலும் பார்க்க

கழுகார் : `ஆலையைத் திறக்க வேறொரு ரூட் ’ டு `குழப்பத்தில் பெண் தெய்வப் பிரமுகர்’

அம்பலமாகும் கூட்டுச் சதி!மரக் கொள்ளைக்காக ஆப் ஆனதா சி.சி.டி.வி?‘ஜில்’ மாவட்ட நுழைவு வாயிலின் மலைச்சரிவில், யானைகளின் முக்கிய வழித்தடம் மற்றும் வாழ்விடம் அமைந்திருக்கிறது. அதிலுள்ள மரங்களை, ‘முதிர்ந்த ... மேலும் பார்க்க

கேரள : 'மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம், ஆனால் இந்தியை..!' - உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து

மும்மொழிக் கொள்கையால் மத்திய அரசிற்கும், தமிழக அரசிற்கும் இடையே நிறைய கருத்து மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் இந்தி திணிப்பை எதிர்ப்ப... மேலும் பார்க்க