செய்திகள் :

மும்பை: மலை பயணம்; 40 அடி பள்ளத்தில் விழுந்து கிடந்த கார்.. 3 பேர் உடல்கள் மீட்பு - நடந்தது என்ன?

post image

மும்பையைச் சேர்ந்த பிரவின்(27), யாக்னேஷ்(27), ராஜ்போலி ஆகியோர் நாசிக் அருகில் உள்ள திரிம்பகேஷ்வர் சிவன் கோயிலுக்கு சென்று விட்டு காரில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தபோது வழியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் அவர்கள் திடீரென காணாமல் போய்விட்டனர்.

விபத்துக்குள்ளான கார்

அவர்களை மொபைல் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர்களின் உறவினர்கள் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மும்பையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கசரா மற்றும் உன்பர்மாலி மலைக்கிராமத்திற்கு இடையே அடர்ந்த காட்டுக்குள் கார் ஒன்று விபத்துக்குள்ளாகி கிடப்பதை மாடு மேய்க்க வந்தவர்கள் கண்டுபிடித்தனர். உடனே, இது குறித்து அவர்கள் கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

கிராமத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து கிரேன் மூலம் காரை சம்பவ இடத்தில் இருந்து மீட்டனர். அதோடு அங்கு இருந்த சாக்கடையில் தேடிப்பார்த்தபோது மூன்று பேர் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கார் பதிவு நம்பரை வைத்து அக்கார் மும்பையில் பதிவு செய்யப்பட்டது என்று தெரிய வந்தது. இதையடுத்து கசரா போலீஸார் மும்பை போலீஸாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். ஏற்கெனவே மும்பையில் 3 பேர் காணாமல் போய் இருப்பதாக உறவினர்கள் புகார் கொடுத்திருந்தனர். இதையடுத்து மூன்று பேரின் உறவினர்களையும் அழைத்து வந்து உடலை அடையாளம் காட்டியபோது அவர்கள் காணாமல் போனவர்கள் என்று தெரிய வந்தது.

மூன்று பேரும் மலையில் வந்தபோது, வளைவில் கார் விபத்துக்குள்ளாகி மரத்தில் மோதி 40 அடி பள்ளத்தில் விழுந்துள்ளததாக போலீஸார் தெரிவித்தனர்.

சாலையில் இருந்து பார்த்தால் கார் விபத்துக்குள்ளாகி இருப்பதற்கான எந்த வித அறிகுறியும் தென்படவில்லை என்றும் கூறுகின்றனர். மூவரும் மது அருந்திவிட்டு கார் ஓட்டினார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்துவமனையில் விமானி

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் புனித தளத்துக்குச் சென்ற தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில், திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானி சிக்கலான சாலையில் ஆபத்தான முறையில் தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு... மேலும் பார்க்க

Shine Tom Chacko : விபத்தில் சிக்கிய நடிகர் ஷைன் டாம் சாக்கோ... தந்தை உயிரிழந்த சோகம்

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் ஷைன் டாம் சாக்கோ. மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த இவர், சமீபத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் சிக்கினார். அந்த செய்தியி... மேலும் பார்க்க

RCB வரவேற்பு: கூட்டநெரிசல்; உடுமலை இளம் பெண் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம்

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கர்நாடக மாநில அரசு மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆர்சிபி அணி... மேலும் பார்க்க

Assam flood: 2.57 லட்ச மக்கள் பாதிப்பு; பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு - தொடரும் கனமழை

அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 29-ம் தேதி முதல் அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. இதன்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: ஆற்றில் தவறி விழுந்த சிறுவர்கள்; காப்பாற்றிய தொழிலாளர் பலியான சோகம்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தபால் நிலையம் சந்திப்பைச் சேர்ந்த பீட்டர் (58). இவர் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார்.குழித்துறை பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் பீட்டர் தினமும் குளிக்கச் செ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி; கோயில் திருவிழாவில் சோகம்; என்ன நடந்தது?

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நாவிச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர், துளையனூர் பஞ்சாயத்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்.இவரது மகன் உதயம் (வயது: 19). இவர், ஒரு கல்லூரிய... மேலும் பார்க்க