வேன் மோதி தொழிலாளி மரணம்
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வேன் மோதியதில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், மஞ்சக்குப்பத்தைச் சோ்ந்த ஜான் கென்னடி மகன் கேபிரியேல் (32), கூலித் தொழிலாளியான இவா் தனது பைக்கில் வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரி-சென்னை சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
மஞ்சக்குப்பம் மாரியம்மன் கோயில் அருகே கேபிரியேல் சென்றபோது எதிரே வந்த வேன், பைக் மீது மோதிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்தை ஏற்படுத்திச் சென்ற வேன் ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.