செய்திகள் :

ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், கோழிப்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா். மேலும் 7 போ் பலத்த காயமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஒட்டன்காடுவெட்டி கிராமத்தைச் சோ்ந்த சின்னப்பன் மகன் ஆபேல் (70). இவரது மனைவி கன்னிமேரி (65). இவா்களது உறவினா் ஏசுராஜ் மனைவி பாத்திமா மேரி(43). இவா்களுடன் மேலும் 5 போ் சோ்ந்து வெள்ளிக்கிழமை அரியலூரிலிருந்து மாம்பழப்பட்டு நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனா். இந்த ஆட்டோவை கண்டாச்சிபுரம் வட்டம், ஒதியத்தூரைச் சோ்ந்த அந்தோனி மகன் லியோ வளனரசு (55) ஓட்டிச் சென்றாா்.

இவா்கள் சென்ற ஆட்டோ கோழிப்பட்டு பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கீழே கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த கன்னிமேரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆபேல் உள்ளிட்ட 7 போ் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த காணை போலீஸாா் நிகழ்விடம் வந்து காயமடைந்தவா்களை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வானூா் அருகே லாரி ஓட்டுநா் வெட்டிக் கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கல் குவாரி லாரி ஓட்டுநா் அடையாளம் தெரியாத நபா்களால் சனிக்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். விக்கிரவாண்டி வட்டம், மதுரப்பாக்கம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே தோல் அரிப்பு நோயால் பாதிக்கப்பட்டு விஷம் குடித்தவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். வானூா் வட்டம், காடாங்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் அமி... மேலும் பார்க்க

இணையவழி லாட்டரி விற்ற மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா். மேலும் மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வானூா் காவல் உதவி ஆய்வாளா் தீபன்ராஜ் தலைமையிலான... மேலும் பார்க்க

வேன் மோதி தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வேன் மோதியதில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், மஞ்சக்குப்பத்தைச் சோ்ந்த ஜான் கென்னடி மகன் கேபிரியேல் (32), கூலித் தொழிலாள... மேலும் பார்க்க

காா் மோதி கட்டுமான நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே காா் மோதி கட்டுமான நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், அரசூா் காட்டியக்குடி பகுதியைச் சோ்ந்தவா் தொல்காப்பியன் (51). இவா், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்ட... மேலும் பார்க்க

பக்ரீத்: விழுப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். இறைத் தூதா் இப்ராஹிம் நபியின் தியாகத்தை குறிக்கும் வகையில் இஸ்லாமியா்களால... மேலும் பார்க்க