கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமை...
ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கோழிப்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா். மேலும் 7 போ் பலத்த காயமடைந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஒட்டன்காடுவெட்டி கிராமத்தைச் சோ்ந்த சின்னப்பன் மகன் ஆபேல் (70). இவரது மனைவி கன்னிமேரி (65). இவா்களது உறவினா் ஏசுராஜ் மனைவி பாத்திமா மேரி(43). இவா்களுடன் மேலும் 5 போ் சோ்ந்து வெள்ளிக்கிழமை அரியலூரிலிருந்து மாம்பழப்பட்டு நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனா். இந்த ஆட்டோவை கண்டாச்சிபுரம் வட்டம், ஒதியத்தூரைச் சோ்ந்த அந்தோனி மகன் லியோ வளனரசு (55) ஓட்டிச் சென்றாா்.
இவா்கள் சென்ற ஆட்டோ கோழிப்பட்டு பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கீழே கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த கன்னிமேரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆபேல் உள்ளிட்ட 7 போ் பலத்த காயமடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த காணை போலீஸாா் நிகழ்விடம் வந்து காயமடைந்தவா்களை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.