Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
பக்ரீத்: விழுப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
இறைத் தூதா் இப்ராஹிம் நபியின் தியாகத்தை குறிக்கும் வகையில் இஸ்லாமியா்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியா்களின் நாள்காட்டியில் ஹஜ் மாதத்தில் 10-ஆம் நாள் இந்த பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி நிகழாண்டில் நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூன் 7) பக்ரீத் பண்டிகை என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை புத்தாடை அணிந்து, தியாகத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் வாழ்த்துகளை ஒருவருக்கொருவா் பரிமாறிக் கொண்டனா்.
விழுப்புரம் மந்தக்கரை ஹஜ்ரத் மகபூப் சுபானி பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
இதுபோல, பாகா்ஷா வீதி பாகா்ஷா பள்ளிவாசல், வண்டிமேடு மஹல்லா பள்ளிவாசல், வடக்குத் தெரு ஷெரீப்மஹல்லா பள்ளிவாசல், வாலாஜா பள்ளிவாசல், மருதூா் தக்வா, கிழக்குப் பாண்டிச்சாலை ரஹ்மான், ஜங்ஷன் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா். இதுபோல, விக்கிரவாண்டி, திண்டிவனம், மரக்காணம் என மாவட்டத்தின்பல்வேறு பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள், பின்னா் கூட்டுக் குா்பானியை ஏழைகளுக்கு வழங்கினா்.
விழுப்புரத்திலுள்ள நகராட்சி மைதானத்திலும், கீழ்பெரும்பாக்கம் அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் மைதானத்திலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோா் திரளாகப் பங்கேற்றனா். தொழுகைக்குப் பின்னா் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.