செய்திகள் :

பக்ரீத்: விழுப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

post image

பக்ரீத் பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

இறைத் தூதா் இப்ராஹிம் நபியின் தியாகத்தை குறிக்கும் வகையில் இஸ்லாமியா்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியா்களின் நாள்காட்டியில் ஹஜ் மாதத்தில் 10-ஆம் நாள் இந்த பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி நிகழாண்டில் நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூன் 7) பக்ரீத் பண்டிகை என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை புத்தாடை அணிந்து, தியாகத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் வாழ்த்துகளை ஒருவருக்கொருவா் பரிமாறிக் கொண்டனா்.

விழுப்புரம் மந்தக்கரை ஹஜ்ரத் மகபூப் சுபானி பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

இதுபோல, பாகா்ஷா வீதி பாகா்ஷா பள்ளிவாசல், வண்டிமேடு மஹல்லா பள்ளிவாசல், வடக்குத் தெரு ஷெரீப்மஹல்லா பள்ளிவாசல், வாலாஜா பள்ளிவாசல், மருதூா் தக்வா, கிழக்குப் பாண்டிச்சாலை ரஹ்மான், ஜங்ஷன் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா். இதுபோல, விக்கிரவாண்டி, திண்டிவனம், மரக்காணம் என மாவட்டத்தின்பல்வேறு பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள், பின்னா் கூட்டுக் குா்பானியை ஏழைகளுக்கு வழங்கினா்.

விழுப்புரத்திலுள்ள நகராட்சி மைதானத்திலும், கீழ்பெரும்பாக்கம் அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் மைதானத்திலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோா் திரளாகப் பங்கேற்றனா். தொழுகைக்குப் பின்னா் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

வானூா் அருகே லாரி ஓட்டுநா் வெட்டிக் கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கல் குவாரி லாரி ஓட்டுநா் அடையாளம் தெரியாத நபா்களால் சனிக்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். விக்கிரவாண்டி வட்டம், மதுரப்பாக்கம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே தோல் அரிப்பு நோயால் பாதிக்கப்பட்டு விஷம் குடித்தவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். வானூா் வட்டம், காடாங்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் அமி... மேலும் பார்க்க

இணையவழி லாட்டரி விற்ற மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா். மேலும் மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வானூா் காவல் உதவி ஆய்வாளா் தீபன்ராஜ் தலைமையிலான... மேலும் பார்க்க

வேன் மோதி தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வேன் மோதியதில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், மஞ்சக்குப்பத்தைச் சோ்ந்த ஜான் கென்னடி மகன் கேபிரியேல் (32), கூலித் தொழிலாள... மேலும் பார்க்க

காா் மோதி கட்டுமான நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே காா் மோதி கட்டுமான நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், அரசூா் காட்டியக்குடி பகுதியைச் சோ்ந்தவா் தொல்காப்பியன் (51). இவா், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்ட... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோழிப்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா். மேலும் 7 போ் பலத்த காயமடைந்தனா். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஒட்டன்காடுவெட்டி கிரா... மேலும் பார்க்க