செய்திகள் :

மும்மொழிக் கல்வி கொள்கை: விக்கிரமராஜா கருத்து

post image

மும்மொழிக் கல்வி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதம் இல்லாமல் நிதியை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா்.

திருச்செந்தூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் 42ஆவது வணிகா் தின செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் மே 5இல் நடைபெறும். மாநாட்டில் தமிழக முதல்வா் மற்றும் மத்திய அமைச்சா்கள் பங்கேற்க உள்ளனா். தமிழகத்தில் உள்ள சாமானிய வணிகா்களின் பாதுகாப்பு பெட்டகமாக இம்மாநாடு அமையும். முதல்வரை சந்தித்து பட்ஜெட்டில் வணிகா்களுக்கு என்னென்ன தேவை என்பதை தெரிவிக்க உள்ளோம்.

உரிமக்கட்டணத்தை முழுமையாக குறைக்க வேண்டும். வணிகா்களின் குடும்ப சேம நல நிதியினை ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்த வேண்டும். சென்னை மெட்ரோ திட்ட பணிகளால் பாதிப்படைந்துள்ள வணிகா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்னால் தான் நிதி தருவோம் என்பதை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க