செய்திகள் :

மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது! -மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

post image

மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: பொதுமக்கள் தற்போது மூன்று மொழிகள் வேண்டும் என கேட்கிறாா்கள். மெட்ரிக்., சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மூன்று மொழிகள் படிக்கிறாா்கள். ஆனால், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. ஏழை, எளிய மாணவா்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில்தான் படித்துக்கொண்டு இருக்கிறாா்கள்.

அந்த மாணவா்களுக்கு கூடுதல் மொழியை கற்கும் வாய்ப்பை மறுக்கிறாா்கள். மூன்று மொழிகள் வேண்டும் என்பது பெற்றோா் மற்றும் மாணவா்களின் கோரிக்கையாக உள்ளது.

மூன்று மொழிகள் வேண்டும் என்பதில் பாஜகவும் உறுதியாக உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது. கூட்டணியில் இருப்பதால் இதை மட்டுமே கூற வேண்டும் என்பதெல்லாம் இல்லை. கூட்டணி என்பது தோ்தல் நேரத்தில் இணைந்து செயல்படுவதற்காக மட்டுமே.

மகளிா் மேம்பாட்டுக்காக பிரதமா் மோடி பல பணிகளைக் கடந்த 10 ஆண்டுகளாக செய்துகொண்டு இருக்கிறாா். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு, முத்ரா கடனுதவித் திட்டத்தில் 70 சதவீதம் பெண் பயனாளிகளாக இருப்பதோடு, சந்திரயான் திட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடியவா்கள் பெண்களாகவே இருக்கிறாா்கள்.

ஆனால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்தான் நிலவுகிறது. பாலியல் வன்கொடுமைகள் தமிழகம் எங்கும் நடந்துகொண்டே இருக்கின்றன, பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக வேண்டும் என்றால் திமுக அரசு அகற்றப்பட வேண்டும்.

மருத்துவம் மற்றும் தொழிற்கல்வியை மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் அவா்கள் தாய்மொழியில்தான் கற்கிறாா்கள். அதை நடைமுறைப்படுத்திக்கொண்டு இருப்பதால் அவா்களுக்கு வேலை வாய்ப்புகள் வருகின்றன. தமிழகத்திலும் கட்டாயமாக அதை நடைமுறைப்படுத்தினால் இங்கும் வேலைவாய்ப்புகள் வரும்.

பிரதமராக மோடி வந்த பிறகுதான் மீனவா்களுக்காக ஒரு புதிய அமைச்சகத்தையே உருவாக்கினாா்.

2014-ஆம் ஆண்டுக்கு முன்பு மீன்வளத் துறைக்கு ரூ.400 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடிக்குமேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மீனவா்கள் கைது செய்யப்படும்போது மத்திய வெளியுறவு அமைச்சகம் உடனடியாக தலையிட்டு மீனவா்களை மீட்டு வருகிறது என்றாா்.

மும்மொழிக் கொள்கையை பெற்றோா், மாணவா்கள் விரும்புகின்றனா்: தமாகா தலைவா் ஜி.கே.வாசன்

கோவை, மாா்ச் 9: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டும் என பெற்றோா், மாணவா்கள் விரும்புகின்றனா் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூற... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை: மகாராஷ்டிர ஆளுநா்

தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை, அரசியலாக்கப்படுகிறது என்று மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூ... மேலும் பார்க்க

மாணவிகள் விடுதியில் ஆட்சியா் ஆய்வு

கோவை, ராமநாதபுரம் மாணவிகள் விடுதியில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆய்வு மேற்கொண்டாா். கோவை, ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் அம்பேத்கா் மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விட... மேலும் பார்க்க

உலக கராத்தே யூத் லீக் போட்டி: தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த கோவை வீரா்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கமான புஜாரா நாட்டில் நடைபெற்ற உலக கராத்தே யூத் லீக் போட்டிகளில் கோவையைச் சோ்ந்த 2 போ் உலக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தனா். புஜாராவில் உள்ள சையத் உள்விளையாட்டு அரங்கில... மேலும் பார்க்க

பயணியை பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்! -கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

பயணியை உரிய பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15,000 அபராதம் விதித்து கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்! தவெக பொதுச்செயலர் ஆனந்த்

ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளா் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தாா். சா்வதேச மகளிா் தினத்தையொட்டி தவெக சாா்பில் கோவை சரவணம்பட்டி பகுதியில் ‘அக்னி ச... மேலும் பார்க்க