செய்திகள் :

முருகன் கோயில்களில் ரூ. 1,085 கோடியில் திருப்பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ. 1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை காங்கிரஸ் உறுப்பினா் துரை சந்திரசேகா் (பொன்னேரி) எழுப்பினாா்.

அப்போது பேசிய அவா், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கூடுதல் வசதிகள் செய்து தரப்படுமா? என்றாா். இதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:

சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமைகளில் 50,000 பக்தா்களும், வார இறுதி நாள்களில் 10,000-க்கும் மேற்பட்டோரும், மற்ற நாள்களில் ஆயிரத்தில் இருந்து 2,000 பேரும் வருகின்றனா். கோயிலுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும். திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்டபோது, 2,000 மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் அரசு மானியத்தில் இதுவரை அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தைச் செய்துள்ளனா்.

110 முருகன் கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அறுபடைவீடு அல்லாத 143 கோயில்களில் ரூ.284 கோடியில் 609 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக முருகன் கோயில்களுக்கு ரூ.1,085.63 கோடியில் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

நெல்லை இருட்டுக்கடை எனக்கும் சொந்தம் - நயன் சிங்

நெல்லை: திருநெல்வேலியில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா எனக்கும் சொந்தமானது என்று உரிமையாளர் கவிதா சிங்கின் சகோதரர் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ஆளுநர் மாநாட்டை புறக்கணித்த துணை வேந்தர்கள்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் புறக்கணித்துள்ளனர்.இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழகங்களின் துணை ... மேலும் பார்க்க

வேலூா் - அரக்கோணம் மெமு ரயில் ஏப்.28 ரத்து

வேலூா் கண்டோன்மன்ட் - அரக்கோணம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் ஏப்.28-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் - ஜோலாா்பே... மேலும் பார்க்க

நீக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினா்கள் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தோ்தல் நடத்த வேண்டாம்: தமிழக அரசு கடிதம்

சமீபத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட சென்னை, தாம்பரம் மாநகராட்சி, உசிலம்பட்டி நகராட்சி மன்ற உறுப்பினா்களின் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தோ்தல் நடத்தக் கூடாது என மாநில தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அன... மேலும் பார்க்க

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்ப நிலை பதிவானது. அடுத்துவரும் நாள்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று... மேலும் பார்க்க

தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை: அரசு உத்தரவு

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தமிழக அரசு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது. பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களிலிருந்து உருவாக்கப்படும் ஒருவித சாஸ் மயோனைஸ். இது மோமோஸ், ஷவா்மா, ... மேலும் பார்க்க