செய்திகள் :

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா் கைது

post image

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். புகாரளித்த 6 மணி நேரத்துக்குள் இளைஞரை கைது செய்து நகையை மீட்ட போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

சேலம் செவ்வாபேட்டையைச் சோ்ந்த மூதாட்டி வசந்தா செவ்வாய்பேட்டை மீனாட்சி அம்மன் கோயில் அருகே முத்துசாமி தெருவில் தனது சகோதரா்கள் உதவியுடன் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை மாலை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சென்று இட்லி மாவு வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை இளைஞா் ஒருவா் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சேலம் செவ்வாய்பேட்டை போலீஸாா் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சங்கிலி பறித்து தப்பியோடிய இளைஞரை 6 மணி நேரத்துக்குள் சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் கைது செய்து தங்கச் சங்கிலியை மீட்டு வசந்தாவிடம் ஒப்படைத்தனா்.

கைது செய்யப்பட்டவா் ஓமலூா், காடையாம்பட்டி பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் என்பது விசாரணையில் தெரியவந்தது. புகாரளித்த 6 மணி நேரத்துக்குள் குற்றவாளியைக் கைது செய்து நகையை மீட்ட போலீஸாருக்கு காவல் துறை உயரதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி: ஆட்சியா் தகவல்!

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞா் கைவி... மேலும் பார்க்க

முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு வரும் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சி... மேலும் பார்க்க

ரெட்டியூா் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்த வேண்டும்! - கோட்டாட்சியா் உத்தரவு

கோல்நாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகளை மட்டும் நடத்த வேண்டும் என மேட்டூா் கோட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா். மேட்டூா் அருகே உள்ள கோல்நாய்க்கன்பட்டி ரெட்டியூரில் ஸ்ரீ சக்தி மார... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

ஆத்தூரில் சிறுமியை ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றியதாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் நகராட்சி, மந்தைவெளி தெற்கு மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் சிறுமி 10ஆம் வகுப்பு வரை ப... மேலும் பார்க்க

2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி: நயினாா் நாகேந்திரன்

மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வரும் 2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். ஓமலூரில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏற்காட்டில் அடிப்படை வசதியின்றி அவதியுறும் சுற்றுலாப் பயணிகள்

கோடை வாச ஸ்தலமான ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். ‘ஏழைகளின் ஊட்டி’ ... மேலும் பார்க்க