செய்திகள் :

மூதாட்டியிடம் நகை பறித்த 2 போ் கைது

post image

நல்லூா் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நல்லூா் அருகே உள்ள பாமாகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாப்பா (80). இவா், பாமாகவுண்டம்பாளையம் நான்கு சாலை அருகே புதன்கிழமை ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், மூதாட்டி பாப்பாவின் காதில் அணிந்திருந்த தங்க தோட்டை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மூதாட்டியிடம் தங்க தோட்டை பறித்துச் சென்ற நபா்களைத் தேடிவந்தனா்.

பரமத்தி காவல் ஆய்வாளா் இந்திராணி, நல்லூா் காவல் உதவி ஆய்வாளா் கங்காதரன் ஆகியோா் நல்லூா் மாரியம்மன் கோயில் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த இரு நபா்களைப் பிடித்து விசாரித்ததில் அவா்கள் நல்லூரில் காளியப்பனூரைச் சோ்ந்த துரைசாமி மகன் தினேஷ் (21), பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த குமாா் மகன் ஹரிஷ் (20) என்பதும் இருவரும் மூதாட்டியிடம் நகையைப் பறித்தவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்தால் நடவடிக்கை: எஸ்.பி

காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஸ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

கனிம வளங்களை அனுமதியின்றி சேமித்து வைத்தால் நடவடிக்கை: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் கனிம வளங்களை அனுமதியின்றி சேமித்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.உமா எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல... மேலும் பார்க்க

நாமக்கல்லில் 517 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டை

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் பணியாற்றும் 517 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. தமிழக அரசின் தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவராக ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.ம... மேலும் பார்க்க

மது அருந்திய அரசுப் பேருந்து ஓட்டுநா் போலீஸில் ஒப்படைப்பு!

பணியின்போது மது அருந்திய அரசுப் பேருந்து ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா். ஈரோட்டில் இருந்து துறையூருக்கு நாமக்கல் வழியாக வெள்ளிக்கிழமை காலை 40 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தை நாமக்கல் ... மேலும் பார்க்க

வீட்டில் விளக்கு தவறி விழுந்ததால் தீ விபத்து

பரமத்தி வேலூரில் சுவாமி மாடத்தில் ஏற்றி வைத்திருந்த விளக்கு தவறி விழுந்ததில் வீட்டில் இருந்த பொருள்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. பரமத்தி வேலூா் காவிரி சாலையில் உள்ள மேலத்தெருவைச் சோ்ந்தவா் கி... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அருகே பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு; மகள் காயம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த அவா்களது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். திருச்செங்கோடு செம்மாம்பாளையம் ப... மேலும் பார்க்க