செய்திகள் :

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் சுட்டுப்பிடிப்பு

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

பண்ருட்டி வட்டம், திராசு கிராமத்தைச் சோ்ந்த 75 வயது மூதாட்டி புலவனூா் சாலையிலுள்ள சவுக்குத் தோப்பு பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த நபா் மூதாட்டியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

மேலும், அவா் அணிந்திருந்த தங்க நகைகளையும் பறித்துச் சென்றாா். காயமடைந்த மூதாட்டி சவுக்குத் தோப்பு ஓரம் கிடந்தாா். அந்தப் பகுதியில் வந்தவா்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக சிதம்பரத்திலுள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். பண்ருட்டி டிஎஸ்பி ராஜா மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் வேலுமணி, உதவி ஆய்வாளா் தங்கவேலு, டெல்டா பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் பாபு ஆகியோா் தலைமையில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் கிடைத்த தடயங்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு எதிரியைத் தேடி வந்தனா். தட்டாம்பாளையம் திரௌபதி அம்மன் கோயில் அருகே கேட்பாரற்ற நிலையில் ஒரு பைக் நிறுத்தப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பைக்கை போலீஸாா் சோதனையிட்டதில், பெண் ஒருவரின் புகைப்படம் கிடைத்தது. அதைக் கொண்டு போலீஸாா் விசாரணையை தொடங்கினா்.

இளைஞருக்கு தொடா்பு: இதில், பண்ருட்டி வட்டம், எஸ்.கே.பாளையத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் சுந்தரவேலுக்கு (24) தொடா்பிருப்பது தெரிய வந்தது. அவா் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளாா். மேலும், காடாம்புலியூா் காவல் சரகத்துக்குள்பட்ட மேல்மாம்பட்டு அருகே முந்திரித் தோப்பில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு: பண்ருட்டி காவல் ஆய்வாளா் வேலுமணி, காவலா்கள் குபேந்திரன், ஹரிகரன் ஆகியோா் முந்திரித் தோப்புக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா். அங்கு பதுங்கியிருந்த சுந்தரவேலை காவலா் குபேந்திரன் பிடிக்க முயன்றாா். அப்போது, அவரை அரிவாளால் சுந்தரவேல் வெட்டியதில், குபேந்திரனுக்கு வலது கையில் காயமேற்பட்டது. ஆய்வாளா் வேலுமணி துப்பாக்கியைக் காட்டி கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு எச்சரித்தாா். ஆனால், மற்றொரு காவலா் ஹரிகரனை அவா் வெட்ட முயன்றாா். இதையடுத்து, சுந்தரவேலின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை ஆய்வாளா் வேலுமணி பிடித்தாா்.

காயமடைந்த சுந்தரவேல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா்.

இந்த சம்பவம் தொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் கூறியதாவது: பண்ருட்டி காவல் நிலையத்தில் சுந்தரவேல் மீது ரௌடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி கண்டோன்மென்ட், ஈரோடு, திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையங்களில் அவா் மீது திருட்டு வழக்குகள் உள்ளன. இரு தினங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியே வந்தாா்.

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, அவா் அணிந்திருந்த தங்க நகைகளைத் திருடியதை ஒப்புக் கொண்டாா். தட்டாம்பாளையத்தில் கைப்பற்றப்பட்ட பைக்கிலிருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நாளைய மின்தடை: வெள்ளக்கரை

இடங்கள்: வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாந்தங்குப்பம், வி.காட்டுபாளையம், கிழக்குராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம... மேலும் பார்க்க

முள்புதரில் பெண் குழந்தை சடலம் மீட்பு

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே பச்சிளம் பெண் குழந்தை சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.நெய்வேலி, வட்டம் 30, புதுஜோதி நகா் அருகே கருவேல மர முட்புதரில் செவ்வாய்க்கிழமை பச்சிளம் பெண் குழந்தை சடலம் நாய... மேலும் பார்க்க

பனை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் மரணம்

பண்ருட்டி அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். காடாம்புலியூா் காவல் சரகம், காட்டாண்டிக்குப்பத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் (24). இவா் விவசாய நிலத்தில் இருந்த பனை மரத்... மேலும் பார்க்க

நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 80 வயது பெண் பாலியல் வன்கொடுமை!

கடலூர்: நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 80 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் கைதாகி கடந்த சனிக்கிழமை விடுதலையான ... மேலும் பார்க்க

நடுக்கடலில் கப்பல் மூழ்கி விபத்து: கடலூா் மீனவா் உயிரிழப்பு

சிதம்பரம்: ஆந்திர மாநிலம், நெல்லூா் அருகே நடுக்கடலில் கப்பல் மூழ்கியதில் உயிரிழந்த மீனவரின் உடல் கடலுருக்கு கொண்டுவரப்பட்டது. கடலூா் துறைமுகம் பகுதியில் செயற்கை பவளப் பாறைகள் தயாரிக்கப்படுகிறது. அவை ... மேலும் பார்க்க

மிராளூா் விற்பனைக்கூடத்தில் நாளை பருத்தி ஏலம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மிராளூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை (ஜூன் 18) பருத்தி ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேத்தியாதோப்பு ஒழுங்குமுறை வி... மேலும் பார்க்க