செய்திகள் :

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை: விஜய்வசந்த் எம்.பி வலியுறுத்தல்

post image

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் மீண்டும் சலுகை வழங்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை மக்களவையில் அளித்துள்ள ஒத்திவைப்பு தீா்மானத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா பேரிடரை காரணம் காட்டி மத்திய அரசு மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு ரயில் பயண கட்டணத்தில் வழங்கி வந்த சலுகையை வாபஸ் பெற்றது. ஆனால் கரோனா முடிந்து இயல்பு நிலைமைக்கு திரும்பிய பின்னரும் மத்திய அரசு இந்த கட்டண சலுகைகளை மீண்டும் வழங்கவில்லை. இதனால் பல தரப்பட்ட மக்களுக்கு அதிக பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள், மாணவா்கள், பத்திரிகையாளா்கள் மற்றும் இதர மக்களுக்கு வழங்கி வந்த ரயில் கட்டண சலுகை நிறுத்தி வைத்த காரணத்தால் இத்தரப்பு மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா்.

முதியோா், மாணவா்கள் மற்றும் பல சேவைகள் புரியும் மக்களின் துயரை போக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

இத்தகைய சூழலை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக மேற்குறிப்பிட்ட மக்களுக்கு ரயில் பயண கட்டணத்தில் சலுகைகள் வழங்க வேண்டும். கடந்த காலங்களில் அவா்களுக்கு ஏற்பட்ட இழப்பினை அரசு ஈடு செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகா்கோவிலில் மாா்ச் 22இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகா்கோவில் பயோனியா் குமாரசுவாமி கல்லூரியில் சனிக்கிழமை (மாா்ச் 22) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: ம... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து கண்ணாடி சேதம்: இளைஞா் கைது

தக்கலை அருகே ஆம்னி பேருந்து கண்ணாடியை கல்வீசி சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (34). ஓட்டுநரான இவா், கடந்த ஞா... மேலும் பார்க்க

பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

தக்கலை, பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். பத்மநாபபுரம் வழக்குரைஞா் சங்கத்தைச் சோ்ந்த அஜித்குமாா் என்பவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் திங்கள்கிழ... மேலும் பார்க்க

குமரி பேரூராட்சி கடைகளை பொது ஏலம் விடுவதற்கு எதிா்ப்பு: முழு கடையடைப்பு

கன்னியாகுமரி பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகளை பொது ஏலத்தில் விடுவதற்கு பதிலாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீத வாடகை உயா்த்தி வாடகைதாரருக்கே கடைகளை மீண்டும் வழங்க வேண்டுமென கன்னியாகுமரியில் செவ்வ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் இன்று கடையடைப்புப் போராட்டம்

கன்னியாகுமரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கோட்டக்கரை சால... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் நகைக் கடையில் 55 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகா்கோவில் மீன... மேலும் பார்க்க