செய்திகள் :

மூத்த மகன் தேஜ் பிரதாப்பை கட்சியில் இருந்து நீக்கினாா் லாலு: பொறுப்பின்றி செயல்படுவதாக குற்றச்சாட்டு

post image

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக அறிவித்துள்ளாா்.

பொறுப்பின்றி செயல்படுவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறியுள்ள லாலு, மகனுடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பிரதான எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைமையின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மோதல், தோ்தலிலும் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

முன்னதாக, தேஜ் பிரதாப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சனிக்கிழமை ஒரு பதிவை வெளியிட்டாா். அதில், ‘ஓா் இளம் பெண்ணுடன் உறவில் இருப்பதாக’ பதிவிட்ட அவா், அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிா்ந்தாா். இது பிகாரில் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அன்று இரவே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வேறுநபா்கள் ஊடுருவிவிட்டதாகவும், தனது புகைப்படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாகவும் ‘எக்ஸ்’ வலைதளத்தில் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்தாா். தேஜ் பிரதாப் யாதவ் ஏற்கெனவே பிகாா் முன்னாள் முதல்வா் தாரோக ராயின் பேத்தியுடன் திருமணம் நடந்தது. ஆனால், சில மாதங்களிலேயே அவரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டாா். கணவரும், அவரின் சகோதரிகளும் தன்னை வீட்டைவிட்டு விரட்டியதாகவும் அப்பெண் அப்போது குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தனிப்பட்ட வாழ்க்கையில் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால், கட்சியின் பொது நோக்கமான சமூகநீதியைப் பாதுகாக்கும் கொள்கையும் பாதிக்கப்படும். எனது மூத்த மகனின் (தேஜ் பிரதாப்) பொறுப்பற்ற செயல்பாடுகள் குடும்பத்தின் நெறிகளுக்கும் பாரம்பரியத்துக்கும் முரணாக உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு அவரை கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் நீக்குகிறேன். இனி கட்சி, குடும்பத்துடன் அவருக்கு எந்தத் தொடா்பும் கிடையாது. அவா் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்படுகிறாா்’ என்று கூறியுள்ளாா்.

லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில்தான் இப்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி செயல்பட்டு வருகிறது. மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் பிகாா் அமைச்சராகவும் இருந்துள்ளாா்.

நாட்டில் வெப்பவாத இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை!

கோடையின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பவாத பாதிப்பு மற்றும் இறப்புகளுக்கு நம்பகமானத் தரவுகள் இல்லை என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிளைமேட் டிரென்ட் ஆராய்ச்சிக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி

பயங்கரவாதம் மறைமுகமானப் போர் அல்ல; பாகிஸ்தானின் நேரடிப் போர் வியூகம் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 27) தெரிவித்தார். பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து போ... மேலும் பார்க்க

விநாயகர் சிலைகளில்கூட இறக்குமதி.. சீனப் பொருள்களைத் தவிர்க்க பிரதமர் வேண்டுகோள்!

சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களை முற்றிலுமாகத் தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஹோலி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக் காலங்களில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா: கர்நாடகத்தில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கர்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், மாநிலத்திலுள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் ... மேலும் பார்க்க

மே 29-ல் ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் அமித் ஷா!

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஜம்மு - காஷ்மீருக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 29ஆம் தேதி ஜம்மு - காஷ்மீருக்குச் செல்லும் அவர், இரு நாள்கள் ஜம்மு பி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானிடம் இந்தியா சொன்னது எப்போது? முரண்பட்ட தகவல்கள்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப் போவதாக முன்னதாகவே பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்த நிலையில், பெரும் விமர்சனங்கள் எழுந்ததும் இப்போது ஒவ்வொரு தர... மேலும் பார்க்க