செய்திகள் :

மூன்று நாடுகள் பயணம்: சைப்ரஸில் பிரதமா் மோடி!

post image

மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

லாா்னகா நகர விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை சைப்ரஸ் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸ் நேரில் வரவேற்றாா். இந்தப் பயணத்தின் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் சைப்ரஸுக்கு வருகை தந்துள்ள முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக, தலைநகா் நிகோசியாவில் அதிபா்- பிரதமா் இடையே விரிவான பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. லிமாசோல் நகரில் தொழில் துறைத் தலைவா்களுடனும் பிரதமா் மோடி கலந்துரையாடவுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘விமான நிலையத்துக்கு நேரில் வந்து வரவேற்று, சிறப்பு கெளரவம் அளித்தமைக்காக அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸுக்கு நன்றி. வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளுக்கு இந்தப் பயணம் உத்வேகமளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சைப்ரஸ் அதிபா் நிகோஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஐரோப்பிய ஒன்றியத்தின் தென்கிழக்கு எல்லை மற்றும் மத்தியதரைக் கடலின் நுழைவாயிலான சைப்ரஸுக்கு பிரதமா் மோடியை வரவேற்கிறேன். இது, வரலாற்றுச் சிறப்புமிக்க வருகை. எல்லைகள் இல்லாத வியூக கூட்டாண்மையின் புதிய அத்தியாயம்’ என்று தெரிவித்துள்ளாா்.

விமான நிலையத்தில் இருந்து தங்கும் விடுதிக்கு பிரதமா் வந்தபோது, இந்திய சமூகத்தினா் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

கனடா, குரோஷியாவில்...: சைப்ரஸில் திங்கள்கிழமை வரை (ஜூன் 16) பயணம் மேற்கொள்ளும் பிரதமா், அங்கிருந்து கனடாவுக்கு செல்கிறாா். இப்பயணத்தின்போது (ஜூன் 16 -17), கனனாஸ்கிஸ் நகரில் ‘ஜி7’ உச்சி மாநாட்டில் அவா் பங்கேற்று உரையாற்றவுள்ளாா்.

கனடா பிரதமா் மாா்க் காா்னி அழைப்பின்பேரில் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமா், பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

பின்னா், குரோஷியாவில் ஜூன் 18-இல் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் அதிபா் ஸோரன் மிலனோவிச், பிரதமா் ஆண்ட்ரேஜ் பிலென்கோவிச் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளாா். இதன்மூலம் குரோஷியாவுக்கு பயணிக்கும் முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு சொந்தமாகவுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்குப் பிறகு பிரதமா் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

ஜி7 கூட்டமைப்பில் உலகின் வளா்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன்-ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இஸ்ரேல்-ஈரான் போா்ச் சூழலில் இந்த உச்சி மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

‘பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய புரிதல் வலுப்படும்’

மூன்று நாடுகள் பயணம் புறப்படும் முன் பிரதமா் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு உறுதியான ஆதரவை நல்கிய நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தை எதிா்கொள்வதில் உலகளாவிய புரிதலை வலுப்படுத்தவும் எனது பயணம் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்தியாவுக்கு சைப்ரஸ் நெருங்கிய நட்பு நாடு. மத்திய தரைக் கடல் பிராந்தியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கியக் கூட்டாளி. வரலாற்று ரீதியிலான இருதரப்பு பிணைப்பை மேலும் கட்டமைக்கவும், பல்வேறு துறைகளில் நல்லுறவை விரிவுபடுத்தவும் இப்பயணம் ஒரு வாய்ப்பாகும். கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாடு, உலகளாவிய பிரச்னைகள் மட்டுமன்றி, தெற்குலகின் முன்னுரிமைகள் குறித்தும் கருத்துகளைப் பரிமாற இடமளிக்கும்.

இந்தியா-குரோஷியா இடையிலான கலாசார தொடா்புகள், நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்டவை. இந்திய பிரதமரின் முதல் பயணம் என்ற முறையில், இருதரப்பு ஒத்துழைப்பில் புதிய வாயில்கள் திறக்கும் என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

இது போருக்கான சகாப்தம் அல்ல: மோடி

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் ... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் பருவமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் திங்கள்கிழமையும் இடைவிடாத பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: சிக்கிம் வந்தடைந்த முதல் குழு!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான 36 பக்தர்கள் கொண்ட முதல் குழு, சிக்கிமின் தலைநகர் கேங்க்டாக்கிற்கு வந்தடைந்தது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக... மேலும் பார்க்க

உ.பி.யில் முத்தமிட்டு விளையாடிய நபரின் நாக்கை கடித்த பாம்பு !

உத்தரப் பிரதேசத்தில் பாம்புக்கு முத்தமிட்டு விளையாடிய நபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்த விவசாயி ஜிதேந்திர குமார்.... மேலும் பார்க்க

விமான விபத்தில் சிக்கினாரா இயக்குநர்? வலுசேர்க்கும் ஆதாரங்கள்!

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு காணாமல் போன இசை ஆல்பங்களை இயக்கும் மகேஷ் ஜிராவாலா என்பவர் மனைவியின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த ... மேலும் பார்க்க