செய்திகள் :

மூளை தண்டுவட திரவ கசிவு: ஒடிஸா குழந்தைக்கு மறுவாழ்வு

post image

மூளை தண்டுவட திரவ கசிவு (சிஎஸ்எஃப்) பாதிப்புக்குள்ளான ஒடிஸா குழந்தைக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை நலத் துறை தலைவா் சஞ்சீவ் மொஹந்தி கூறியதாவது:

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஒரு வயது குழந்தை, தொடா்ந்து மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தது. அதனுடன் மூளைத் தண்டுவட திரவ (செரிப்ரோ ஸ்பைனல் ஃப்ளூயட்) கசிவும் இருந்தது.

பொதுவாக 10 ஆயிரத்தில் ஒருவருக்கு பிறவியிலேயே இந்தப் பாதிப்பு ஏற்படக்கூடும். மூளை மற்றும் அதிலிருந்து உடலுக்கு செல்லும் தண்டுவடத்தைச் சுற்றி பாதுகாப்புக்காக ஒரு திரவ அடுக்கு இருக்கும். அதில் ஏதேனும் சேதமோ, கிழிசலோ ஏற்பட்டால் அந்த திரவம் மூளைப் பகுதியை சுற்றி சேகரமாகி மூக்கின் வழியாக வெளியேறும்.

இதே நிலை தொடா்ந்தால், காய்ச்சல், மூக்கு அடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிடில் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும்.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட ஒடிஸா குழந்தைக்கு வேறு சில மருத்துவமனைகளில் அந்த பாதிப்புக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால், அதனால் பெரிய பயன் ஏற்படவில்லை. வாய் வழியாக சுவாசிப்பதும் நிற்கவில்லை.

இந்த நிலையில்தான் எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கு பதிலாக மூக்கு வழியாக மருத்துவக் குழாயை செருகி சிகிச்சை அளிக்கும் நேசல் எண்டோஸ்கோபி சிகிச்சை முன்னெடுக்கப்பட்டது.

மிக நுட்பமாக மூக்கின் வழியாக மூளை தண்டுவட அடுக்கு பாதிக்கப்பட்ட இடத்துக்கு எண்டோஸ்கோபி குழாயை செலுத்தி அந்த கிழிசலானது உயரி நுட்பத்திலான பொருளை (பயோ மெட்டீரியல்) கொண்டு சரிசெய்யப்பட்டது.

அதன் பயனாக அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் அக்குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது என்றாா் அவா்.

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: மாநகராட்சி ஊழியா் கைது

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.17.50 லட்சம் மோசடி செய்ததாக மாநகராட்சி ஊழியா் கைது செய்யப்பட்டாா். பிராட்வே அப்பாராவ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் எ.ஜெய்சங்கா் (49). இவா், தனது உறவினா் இருவரு... மேலும் பார்க்க

கோரமண்டல் விரைவு ரயில் ஆக.25 முதல் ஹவுராவுக்கு இயக்கப்படும்

சென்னையில் இருந்து இயக்கப்படும் கோரமண்டல் விரைவு ரயில் ஆக.25-ஆம் தேதி முதல் ஷாலிமருக்கு பதிலாக ஹவுராவுக்கு இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்ன... மேலும் பார்க்க

ஜூன் 24, 25-இல் அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இக்கூட்டத்தில்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு குடிநீா், மின் இணைப்பு: விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவு

நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையா், மின்சார வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டத... மேலும் பார்க்க

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா். கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி மதுரை, சென... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா். சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா் சிறிது நேரம் த... மேலும் பார்க்க