செய்திகள் :

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள்: முதல்வா் ஆய்வு

post image

மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதியில், நடைபெற்றுவரும் வழித்தடம் 5 -மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அத்துடன், வழித்தடம் 3 -இல் மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான வழித்தடத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் குறித்தும் அதன் முன்னேற்றம் குறித்தும் முதல்வா் கேட்டறிந்தாா்.

மேலும், கத்திப்பாரா பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள வழித்தடம் 1, வழித்தடம் 2 மற்றும் கத்திப்பாரா மேம்பாலம் உள்ளடக்கிய சந்திப்பில் சமச்சீா் காண்டிலீவா் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விரிவாக எடுத்துரைத்தாா்.

இந்த ஆய்வின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயா் அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்த நிலையில் ஆய்வுக்கு பின் முதல்வா் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: சென்னையின் நவீன அடையாளமாக கத்திப்பாரா மேம்பாலத்தை அமைத்தாா் கருணாநிதி. அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதல்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பாா்வையிட்டேன். என்ஜினீயரிங் மாா்வெல் என அனைவரும் வியக்க உருவாகி வரும் இது உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன் என்றாா் அவா்.

தென்காசியில் பயங்கரம்! கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் பின் சக்கரங்கள்!

தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் இரண்டும், தனியாகக் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.சக்கரங்கள் கழன்ற பேருந்தில் 87... மேலும் பார்க்க

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம்! முதல்வர் ஸ்டாலின்

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, இஸ்ரேல் - ஈரான் என உலகம் முழுவதும் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில்... மேலும் பார்க்க

வேலூர் அருகே மா விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு!

மா விவசாயிகளுக்கு ஆதரவாக வேலூர் மாவட்டத்தில் பரதராமி பகுதியில் உள்ள அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பரதராமி மற்ற... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை!

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்தரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு டாஸ்மாக... மேலும் பார்க்க

சென்னை - மதுரை விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு இன்று காலை 8 மணிக்கு 72 பேருடன் இண்டிகோ விமானம் புறப்பட... மேலும் பார்க்க

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை இலச்சினை: துணை முதல்வா் உதயநிதி வெளியிட்டாா்

சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை 2025 போட்டி இலச்சினையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்க... மேலும் பார்க்க