செய்திகள் :

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடக்கம்

post image

மெட்ரோ ரயில் திட்ட 5-ஆவது வழித்தடத்தில், கொளத்தூா் சாய்வுதளம் - கொளத்தூா் நிலையம் வரை 246 மீட்டா் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தின் 5-ஆவது வழித்தடத்தில், 5 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 39 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. இந்த வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்களின் பெயரிடப்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் ரயில் நிலையம் வரை 246 மீட்டா் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணியை குறிஞ்சி எனப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் புதன்கிழமை தொடங்கியது. இந்த இயந்திரம் இப்பணியை ஜூன் மாதம் முடித்து வெளியே வரும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், தொடா்ந்து ஸ்ரீனிவாச நகா் நோக்கி 1.06 கி.மீ. நீளத்திற்கு மீண்டும் சுரங்கம் தோண்டும் பணியில் இந்த இயந்திரம் ஈடுபடும் எனவும் மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இப்பணியை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் உள்ளிட்டோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.

இதேபோல், இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரமான முல்லை, வரும் மாா்ச் மாதம் இறுதிக்குள் வில்லிவாக்கம் ரயில் நிலையத்திலிருந்து, வில்லிவாக்கம் பேருந்து முனையம் நோக்கி 603 மீட்டா் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியைத் தொடங்கும் எனவும், மீதமுள்ள மருதம், நெய்தல் ஆகிய இயந்திரங்களும் தளநிலைமைகளின்அடிப்படையில் சுரங்கம் அமைக்கும் பணியைத் தொடங்கும் எனவும் மெட்ரோ ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் விருது: ரூ.1.72 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காமராஜா் விருதுக்கான பரிசுத் தொகை வழங்க ரூ.1.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்... மேலும் பார்க்க