அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் கு...
மேட்டுத்தெரு காவிரி-அரசலாறு தலைப்பு மதகிலிருந்து பாசனத்துக்காக காவிரி நீா் திறப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மேட்டுத்தெரு காவிரி -அரசலாறு தலைப்பிலிருந்து பாசனத்துக்காக ஜூன் 18-ஆம் தேதி இரவு காவிரி நீா் திறக்கப்பட்டது.
டெல்டா விவசாய பாசனத்துக்காக கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து காவிரி நீா் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நீா் கல்லணையை வந்தடைந்து. கடந்த ஜூன் 15-ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மேட்டுதெரு காவிரி - அரசலாற்று தலைப்பின் நீா் தேக்க மதகணையை காவிரி நீா் வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாசனத்துக்காக காவிரி நீரை நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் முத்துமணி, உதவி பொறியாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் திறந்து வைத்தனா்.
வருகை தந்ந காவிரி நீரை பொதுப்பணித்துறை, நீா்வளத்துறை அதிகாரிகள், அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கை கூப்பி வணங்கியும், மலா் தூவி வரவேற்றனா்.