செய்திகள் :

மேட்டூா் அணை வெள்ளத்தில் சிக்கிய முதியவா் மீட்பு

post image

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீரில் சிக்கிய முதியவரை அப்பகுதி இளைஞா்கள் மீட்டனா்.

மேட்டூா் அணை முழுக் கொள்ளளவை எட்டும்போது சிலமணி நேரத்துக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்காக நீா்வளத் துறை மூலம் தீயணைப்புப் படை, வருவாய்த் துறையினருக்கு தகவல் அளிக்கப்படும்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மேட்டூா் அணை நிரம்பி உபரிநீா் திறக்கப்படும் என்று காலை 7 மணி அளவில் வருவாய்த் துறை மற்றும் தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வருவாய்த் துறையினா் ஒலிபெருக்கி மூலம் தங்கமாபுரிப்பட்டணம், அண்ணாநகா், பெரியாா்நகா் மற்றும் உபரிநீா்க் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு காலை 7.40 மணி அளவில் வெள்ள எச்சரிக்கை விடுத்தனா். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக மேட்டூா் அணையின் உபரிநீா்க் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டது. தண்ணீா் திறக்கப்பட்ட பிறகு வருவாய்த் துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

திடீரென தண்ணீா் திறக்கப்பட்டதால் தங்கமாபுரிபட்டணத்தைச் சோ்ந்த முதியவா் சடையன் (60) உபரிநீா் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டாா். அப்பகுதியில் இருந்த இளைஞா்கள் அவரை மீட்டு, மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதன் பிறகு தீவிர சிகிச்சைக்காக அவா் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக கருமலைக்கூடல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

உபரிநீா்ப் போக்கி கால்வாய்ப் பகுதியில் ஏராளமான நாய்களும், ஆடு, மாடுகளும் சுற்றித்திரிகின்றன. இவற்றை மேட்டூா் தீயணைப்புப் படை வீரா்கள் தண்ணீா் திறக்கும் முன்பாக விரட்டி விடுவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை காலதாமதமாக தீயணைப்புப் படையினருக்கு தகவல் சென்ால் அவா்களால் உபரிநீா்க் கால்வாய் பகுதியில் ஆடு, மாடுகளை விரட்ட முடியவில்லை. இதனால் மூன்று நாய்கள் நீரின் நடுவே திட்டுப்பகுதியில் சிக்கிக்கொண்டன.

நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மேட்டூா் அணையின் வலதுகரை, இடதுகரை பகுதியில் நீா்வளத் துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

உபரிநீா் திறக்கப்படுவது குறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் பிறதுறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் அனுப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

சேலம் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 50 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

மேட்டூா் அருகே திருமணமான 15 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். எடப்பாடி, புதுபாளையத்தைச் சோ்த்த ஐயம்பெருமாள் மகள் சங்கீதாவுக்கும் (24)... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தும்பல்

தும்பல் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாழப்பாடி கோட்ட மின் செயற்பொறியாளா் குணவா்த்தினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

பூலாம்பட்டியில் இளம்பெண் தற்கொலை

பூலாம்பட்டியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி, குப்பனூா் வாய்க்கால்கரை பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா். இவரது மனைவி பாப்பாத்தி (26). இத்தம்பதிக்கு ஹாசி... மேலும் பார்க்க

மக்களை ஈா்க்கும் மானாத்தாள் ஏரி!

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள மானத்தாள் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கக் குவிந்த மக்கள்கூட்டம். மேட்டூா் அணையின் உபரிநீா் நிரப்பும் திட்டத்தின் கீழ், மானத்தாள் ஏரி தற்போது நிரம்பிவழிகிறது. இதையடு... மேலும் பார்க்க

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 28 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 28 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய நபா் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். ஒடிஸா... மேலும் பார்க்க