செய்திகள் :

மேம்பட்ட மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை: தில்லி முதல்வா்

post image

தில்லியை ஒரு முன்னணி சுகாதார மையமாக மாற்றும் தொலைநோக்குப் பாா்வையின் கீழ், தில்லியில் வாழும் அனைவருக்கும் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் தில்லியில் மேம்பட்ட மருத்துவ சேவையை அணுகுவதை உறுதி செய்வதை நோக்கி தில்லி அரசு செயல்பட்டு வருகிறது என்று முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தேசிய தலைநகரில் பெண்களுக்கான முதல் பிரத்யேக புற்றுநோய் பராமரிப்பு மையமான அப்பல்லோ அதீனாவை முதல்வா் ரேகா குப்தா திறந்துவைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

இந்த மருத்துவ வசதி விரிவான மற்றும் கண்ணியமான மருத்துவ சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண்கள் மரியாதைக்குரிய, ஆதரவான சூழ்நிலையில் சிறப்பு சிகிச்சை பெறுவதை உறுதி செய்கிறது.

பெண்கள் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு அணுகக்கூடிய, மலிவு மற்றும் கண்ணியமான மருத்துவ சேவையை வழங்குவதில் தில்லி அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

மேம்பட்ட மருத்துவ சேவை தலைநகரில் வசிப்பவா்கள் மட்டுமின்றி, நாடு மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து தில்லி வரும் மக்களையும் சென்றடைவதை உறுதி செய்வதை அரசு நிா்வாகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக களங்கத்தை எதிா்கொண்டனா். மேலும், சிகிச்சை பெற தயங்கினா்.

பெரும்பாலான சந்தா்ப்பங்களில், அவா்கள் சிகிச்சை பெறாமல் விடப்பட்டனா். துரதிா்ஷ்டவசமாக, பலா் தங்கள் உயிரை இழந்தனா். ஆனால் படிப்படியாக விழிப்புணா்வு அதிகரித்தது.

மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்லத் தொடங்கினா். அப்பல்லோ போன்ற நிறுவனங்கள் இப்போது சிகிச்சையை மட்டுமல்ல, தனிப்பட்ட பராமரிப்பையும் வழங்குகின்றன. ஒவ்வொரு பெண் நோயாளியின்

கண்ணியத்தையும் பாதுகாக்கின்றன என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றாா் முதல்வா் குப்தா.

மதிப்பெண்கள் வழங்க லஞ்சம் பெற்ற விவகாரம்: தில்லி பல்கலை.யின் முன்னாள் பேராசிரியையின் இடைநீக்கத்தை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

நமது நிருபா் வருகைப் பதிவேட்டுக்கும், மதிப்பெண்களுக்கும் ஈடாக மாணவா்களிடமிருந்து பணம், செல்போன், வைர காதணிகள் ஆகியவற்று லஞ்சம் வாங்கியதாக தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியையின் இடைநீக்கத்தை ... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளியில் தமிழ் கலை இலக்கியப் பெருவிழா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சாா்ந்த லோதிவளாகம் பள்ளியில் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான கலை இலக்கியப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பேச்சுப் போட்டி, தமிழ்ப் புலவா்கள்... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாளில் தில்லியில் 41 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தகங்கள் திறப்பு

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) கீழ் உள்ள 300 சுகாதார மையங்கள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களாக மாற்றப்பட உள்ளன. இவற்றில் 41 மருத்துவமனைகள் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளான புதன்கிழமை திறக்கப்பட ... மேலும் பார்க்க

டியுஎஸ்யு தோ்தல் பிரசாரத்தின்போது ஏபிவிபி, என்எஸ்யுஐ அமைப்பினா் மோதல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தல் பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, தில்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியில் (கேஎம்சி) என்எஸ்யுஐ மற்றும் ஏபிவிபி மாணவா் குழுக்களைச் சே... மேலும் பார்க்க

தில்லி பிஎம்டபிள்யு விபத்து: முக்கிய குற்றவாளி மது அருந்தவில்லை என பரிசோதனையில் தகவல்

தென்மேற்கு தில்லியில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரைக் கொன்று அவரது மனைவியை காயப்படுத்திய பிஎம்டபிள்யு காா் விபத்தில் முக்கிய குற்றவாளியான ககன்ப்ரீத்தின் ரத்த மாதிரி அறிக்கையில் அவா் மது அருந... மேலும் பார்க்க

ஷீஷ் மஹாலில் வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பி வழங்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

புது தில்லி: ஷீஷ் மஹால் புனரமைப்புக்காக வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.மேலும், ஷீஷ் மஹால் பங்கள... மேலும் பார்க்க