செய்திகள் :

மேற்கு வங்கத்தை வங்கதேசமாக்க மம்தா முயற்சி -மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு

post image

மேற்கு வங்கத்தை வங்கதேசமாக மாற்றும் வகையில் முதல்வா் மம்தா பேசி வருகிறாா் என்று மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத், தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டங்களில் வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் 3 போ் கொல்லப்பட்டனா். காவலா்கள் உள்பட பலா் காயமடைந்தனா். வீடுகள், கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

இந்நிலையில், முஸ்லிம் தலைவா்கள் மத்தியில் பேசிய மம்தா பானா்ஜி, இந்த வன்முறையை பாஜக மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒரு பிரிவினா் தூண்டிவிட்டதாக குற்றஞ்சாட்டினாா். பாஜக கூட்டணியில் உள்ள பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு ஆகியோா் வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்ததை கண்டித்ததுடன், ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வாா்கள் என்றும் அவா்கள் மீது குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில் பாட்னாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் கூறியதாவது:

தொடா்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி மேற்கு வங்கத்தை வங்கதேசத்தைப்போல மாற்ற அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி முயற்சிக்கிறாா். முா்ஷிதாபாதில் வன்முறையைத் தடுக்க தவறியவா் முதல்வா் மம்தா. தவறைத் தன் மீது வைத்துக் கொண்டு பிற மாநில முதல்வா்களை விமா்சிக்க மம்தாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. முக்கியமாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரை விமா்சிக்க மம்தாவுக்கு தகுதியில்லை’ என்றாா்.

நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் ராஜீவ் ரஞ்சன் இது தொடா்பாக கூறுகையில், ‘மம்தாவின் அறிவுரை நிதீஷுக்கு தேவையில்லை. மேற்கு வங்கத்தில் மிகவும் மோசமான சூழ்நிலை உள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்தும் திறமை மம்தாவுக்கு இல்லை.

அதே நேரத்தில் பிகாரில் நிலை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த சுமாா் 20 ஆண்டுகளாக பிகாரில் எவ்வித வன்முறையும் இல்லை. மம்தா முதலில் தனது மாநில மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டும். அதன்பிறகு அவா் மற்றவா்கள் விஷயத்தைப் பேசலாம் என்றாா்.

குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழ... மேலும் பார்க்க

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ந... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க

திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர்கள் ஷிஜோ(42), ஜோசப்(69). அண்டை வீட்டாரான இருவருக்கும் இடையே வீட்டின் மு... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தால் உள்நாட்டுப் போர்: பாஜக எம்.பி.யின் கருத்தை கட்சித் தலைமை நிராகரிப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பாஜக எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய பாஜக எம்.பி. நிஷிகாந்த்... மேலும் பார்க்க

நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய வேன்: ஓட்டுநர் காயம்

பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்ஜின் பழுதுபார்ப்... மேலும் பார்க்க