செய்திகள் :

மேற்கு வங்கம்: ஐஐடி-காரக்பூர் விடுதியில் இருந்து மாணவரின் சடலம் மீட்பு

post image

மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி-காரக்பூர் விடுதியில் இருந்து மாணவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த மாணவரின் பெயர் ரிதம் மொண்டல் (21). அவர் நான்காம் ஆண்டு பொறியியல் மாணவர். அவர் ஐஐடி-காரக்பூர் வளாகத்தில் உள்ள ராஜேந்திர பிரசாத் மண்டபத்தின் அறை எண் 203 இல் வசித்து வந்தார். அங்கிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் ஐஐடி-காரக்பூரின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஹிஜ்லி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

அதன் பிறகு, காவல் துறையினரும் ஐஐடி - காரக்பூர் பாதுகாப்புக் காவலர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவரை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்டனர். அவர் பி.சி. ராய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இறந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ஐஐடி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் ஒரே நாளில் 45 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பில் தலைநகரம்!

குடும்பம் கொல்கத்தாவில் உள்ள ரீஜண்ட் பார்க் பகுதியில் வசிக்கிறது. ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பிறகுதான் இதுகுறித்து தெளிவாகத் தெரியும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர் ஒருவரின் தூக்கில் தொங்கிய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது தற்கொலையாகத் தெரிகிறது. இருப்பினும், உடற்கூராய்வுக்குப் பிறகுதான் இறப்பிற்கான காரணம் தெரியவரும். குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

An incident of unnatural death was reported in IIT Kharagpur (IIT-KGP) on Friday where a student’s body was recovered from one of its hostels.

1ஆம் வகுப்பு முதல் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால் பள்ளிகள் மூடப்படும்: ராஜ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் மூடப்படும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மும்பைக்கு அருகிலுள்ள மீரா பயந்தரில் வெள்ளிக்கிழமை நடந்... மேலும் பார்க்க

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர்!

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் கலோல் வட்டத்தில் உள்ள சத்ரல் கிராமத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண்... மேலும் பார்க்க

ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை: முதல்வர் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிரத்தில் ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். தாணே, நாசிக் மற்றும் மும்பைச் செயலகம் ஆகியவற்றில் உள்ள மாநில அதிகாரிகளை குறிவைத்து ஹனிட்ராப் மோசடி நடந... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி, 5... மேலும் பார்க்க

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது !

அசாமின் இரண்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க