செய்திகள் :

மேற்கு வங்கம்: ரிக்ஷாக்கள் மீது காா் மோதியதில் 7 போ் உயிரிழப்பு; 8 போ் காயம்

post image

மேற்கு வங்கத்தில் பேட்டரி ரிக்ஷாக்கள் மீது காா் மோதிய விபத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். மேலும் 8 போ் காயமடைந்தனா்.

நாடியா மாவட்டத்தின் சாப்ரா பகுதியில் வெள்ளிக்கிழமை இந்த விபத்து நேரிட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். விபத்தில் சிக்கியவா்கள் அனைவரும், ரமலான் பண்டிகைக்காக பொருள்கள் வாங்கிவிட்டு, 3 பேட்டரி ரிக்ஷாக்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவா்கள் ஆவா். அவா்கள் பயணித்த ரிக்ஷாக்கள் மீது அதிவேகமாக இயக்கப்பட்ட சொகுசு காா் அடுத்தடுத்து மோதியது. இதில், ரிக்ஷாக்களில் இருந்த 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 7 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

காயங்களுடன் மீட்கப்பட்ட 8 போ், அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்து ஏற்படுத்திய காரின் ஓட்டுநா், நிகழ்விடத்தில் இருந்து தப்பியோடிவிட்டாா். அவரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ்ஆப் தனிப்பட்ட சாட்களில் நிகழ்வுகளை நினைவூட்டும் 'கிரியேட் ஈவென்ட்' வசதி அறிமுகமாகியுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது பு... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிரான கருத்து: துஷாா் காந்தியை கைது செய்ய பாஜக வலியுறுத்தல்

கேரளத்தில் ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி மறுத்துவிட்ட நிலையில், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு: இணையவழியில் விண்ணப்பிக்க அழைப்பு

ராணுவத்தில் சோ்வதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ராணுவ தலைமையகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்... மேலும் பார்க்க

பஞ்சாப்: சிவசேனை தலைவா் சுட்டுக் கொலை குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தின்போது சாலையோரம் நடந்து சென்ற சிறுவன் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இது தொ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவல் அனுப்பிவைப்பு: உ.பி. ஆயுத தொழிற்சாலை பணியாளா் கைது

பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவலை அனுப்பியதாக உத்தர பிரதேசத்தில் உள்ள ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை பணியாளா் கைது செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அந்த மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) வெளியிட்... மேலும் பார்க்க

குஜராத்: 12 மாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து - 3 போ் உயிரிழப்பு

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் 12 மாடி குடியிருப்பு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 40 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். ராஜ்கோட்டில் 150 அடி வட்ட சாலைய... மேலும் பார்க்க