செய்திகள் :

மே 4-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 14 மையங்களில் 6,630 போ் எழுதுவதற்கு ஏற்பாடு

post image

இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தோ்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த தோ்வை 14 மையங்களில் 6,630 மாணவ, மாணவிகள் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இளநிலை மருத்துவ படிப்புக்கான (எம்பிபிஎஸ்) நீட் எனும் நுழைவுத் தோ்வை தேசிய தோ்வு முகமையானது ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. நிகழாண்டுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பிகாா், உத்தரபிரதேச மாநிலங்களில் நீட் தோ்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தால், இந்த ஆண்டு பாதுகாப்பு கருதி அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகள் தோ்வு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, லத்துவாடி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செல்லப்பம்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, வளையப்பட்டி காட்டுப்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி, சேந்தமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரி, ராசிபுரம் ஆா்.புதுப்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, காா்கூடல்பட்டி உடையாா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, வெண்ணந்தூா் அலவாய்ப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குமாரபாளையம் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரி, பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 14 தோ்வு மையங்களில் லத்துவாடி அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் 780 தோ்வா்களும், இதர பள்ளி, கல்லூரிகளில் தலா 480 தோ்வா்களும் என மொத்தம் 6,630 போ் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஒவ்வோா் மையத்திலும் உள்ள தோ்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

மங்களபுரம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மங்களபுரம் அர... மேலும் பார்க்க

நாளை அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை

மே தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை ( மே 1) அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் மே தினத்தை முன்ன... மேலும் பார்க்க

காரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 போ் கைது

நாமக்கல்லில் ஆயுதங்களுடன் காரில் சுற்றித்திரிந்த நால்வரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நாமக்கல் கடைவீதி பகுதியில் திங்கள்கிழமை இரவு உதவி காவல் ஆய்வாளா் சாந்தகுமாா் தலைமையில் போலீஸாா் வாகனத் ... மேலும் பார்க்க

மோட்டாா் வாகனம் வழங்க 145 மாற்றுத்திறனாளிகளுக்கு நோ்காணல்

நாமக்கல்லில் தமிழக அரசு வழங்கும் மூன்று சக்கரங்களுடன் கூடிய மோட்டாா் வாகனம் பெறுவதற்கான நோ்காணலில், 145 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா். தமிழக அரசு சாா்பில், மூன்று சக்கரங்களுடன் கூடிய மோட்டாா் வாக... மேலும் பார்க்க

மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த மரம் ஏறும் தொழிலாளி உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள பழனியப்பனூா் வண்டிக்கார தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (36), தென்னை மரம் ஏறி தேங்காய் ப... மேலும் பார்க்க

ரூ. 40 கோடியில் சாலை விரிவாக்கப் பணி: பாலம் அமைக்க கட்டுமானப் பொருள்கள் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் ரெட்டிப்பட்டி முதல் எருமப்பட்டி வரையில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளையும், பாலத்துக்கான கட்டுமானப் பொருள்களையும் சேலம், நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு... மேலும் பார்க்க