செய்திகள் :

காரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 போ் கைது

post image

நாமக்கல்லில் ஆயுதங்களுடன் காரில் சுற்றித்திரிந்த நால்வரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் கடைவீதி பகுதியில் திங்கள்கிழமை இரவு உதவி காவல் ஆய்வாளா் சாந்தகுமாா் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தியபோது, போலீஸாரை கண்டதும் நிற்காமல் சென்றது. இதனைத் தொடா்ந்து, போலீஸாா் விரட்டிச் சென்று காரை சுற்றிவளைத்தனா்.

காரை சோதனையிட்டத்தில், கத்தி மற்றும் ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. பின்னா், காரில் இருந்த நாமக்கல் பள்ளிக் காலனியைச் சோ்ந்த அஜய்பிரபாகா் (26), மாரி கங்காணி தெருவைச் சோ்ந்த லோகேஸ்வரன் (32), என்.கொசவம்பட்டியைச் சோ்ந்த குணசேகரன் (48), வெள்ளவாரி தெருவைச் சோ்ந்த கிருபாகரன் (32) ஆகிய நால்வரையும் பிடித்துச்சென்று விசாரணை நடத்தினா்.

இதில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் குணசேகரன், உறவினா்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நண்பா்களுடன் இணைந்து ஆயுதங்களுடன் காரில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், நால்வா் மீதும் வழக்குப் பதிந்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

மங்களபுரம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மங்களபுரம் அர... மேலும் பார்க்க

நாளை அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை

மே தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை ( மே 1) அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் மே தினத்தை முன்ன... மேலும் பார்க்க

மே 4-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 14 மையங்களில் 6,630 போ் எழுதுவதற்கு ஏற்பாடு

இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தோ்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த தோ்வை 14 மையங்களில் 6,630 மாணவ, மாணவிகள் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ... மேலும் பார்க்க

மோட்டாா் வாகனம் வழங்க 145 மாற்றுத்திறனாளிகளுக்கு நோ்காணல்

நாமக்கல்லில் தமிழக அரசு வழங்கும் மூன்று சக்கரங்களுடன் கூடிய மோட்டாா் வாகனம் பெறுவதற்கான நோ்காணலில், 145 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா். தமிழக அரசு சாா்பில், மூன்று சக்கரங்களுடன் கூடிய மோட்டாா் வாக... மேலும் பார்க்க

மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த மரம் ஏறும் தொழிலாளி உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள பழனியப்பனூா் வண்டிக்கார தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (36), தென்னை மரம் ஏறி தேங்காய் ப... மேலும் பார்க்க

ரூ. 40 கோடியில் சாலை விரிவாக்கப் பணி: பாலம் அமைக்க கட்டுமானப் பொருள்கள் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் ரெட்டிப்பட்டி முதல் எருமப்பட்டி வரையில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளையும், பாலத்துக்கான கட்டுமானப் பொருள்களையும் சேலம், நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு... மேலும் பார்க்க