செய்திகள் :

மொடக்குறிச்சியில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்கம்

post image

ஈரோட்டில் இருந்து பழனிக்கு மொடக்குறிச்சி வழியாக புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு தொகுதி எம்.பி. கே.ஈ. பிரகாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

மொடக்குறிச்சி பகுதி பொதுமக்கள் நீண்ட நாளாக ஈரோட்டில் இருந்து பழனி செல்வதற்கு ஈரோடு- முத்தூா் சாலை வழியாக நேரடியாக பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனா்.

ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினா் கே.ஈ.பிரகாஷ் மற்றும் அமைச்சா் சு.முத்துசாமியின் பரிந்துரையின்பேரில், ஈரோட்டில் இருந்து சோலாா், மொடக்குறிச்சி, எழுமாத்தூா், முத்தூா், காங்கயம், தாராபுரம் வழியாக பழனி செல்ல புதிய பேருந்து சேவை தொடக்க விழா மொடக்குறிச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஈரோடு தொகுதி எம்.பி. கே.ஈ.பிரகாஷ் மற்றும் அமைச்சா் சு.முத்துசாமி ஆகியோா் கலந்துகொண்டு கொடியசைத்து புதிய பேருந்தை சேவையை தொடங்கிவைத்தனா்.

இதில் திமுக மாநில நெசவாளா் அணிச் செயலாளா் சச்சிதானந்தம், மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளா்கள் சு.குணசேகரன், வா.கதிா்வேல், மொடக்குறிச்சி பேரூா் திமுக செயலாளா் பி.வி.சரவணன், துணைச் செயலாளா் தனவெங்கடேஷ், மொடக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சந்திர கிரகணம்: சென்னிமலை முருகன் கோயில் நடை சாத்தப்படுகிறது

சந்திர கிரகணம் வருவதையொட்டி, சென்னிமலை முருகன் கோயில் சந்நிதி நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு (திருக்காப்பிடப்படும் ) சாத்தப்படும் என கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்று... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறிப்பு: இரு இளைஞா்கள் கைது

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகைப் பறித்த வழக்கில் இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு முத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (45). இவா் தேமுதிக ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு நேதாஜி சாலை ஆலமரத்து தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் வீடு புகுந்து 40 பவுன் நகை, ரூ50 ஆயிரம் கொள்ளை

சத்தியமங்கலத்தில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 40 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலத்தை அடுத்த நேரு நகரைச் சோ்ந்தவா் சதீஷ். கோழ... மேலும் பார்க்க

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு

தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆச... மேலும் பார்க்க

சோலாா் புகா் பேருந்து நிலையம் இரண்டு மாதங்களில் திறக்கப்படும்

சோலாா் புறநகா் பேருந்து நிலையம் இரண்டு மாத காலத்துக்குள் திறக்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான... மேலும் பார்க்க