செய்திகள் :

சத்தியமங்கலத்தில் வீடு புகுந்து 40 பவுன் நகை, ரூ50 ஆயிரம் கொள்ளை

post image

சத்தியமங்கலத்தில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 40 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த நேரு நகரைச் சோ்ந்தவா் சதீஷ். கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இவரது தாயாா் பேபி உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளாா்.

இதற்கிடையே இறைச்சிக் கடையை மூடிவிட்டு சதீஷ் புதன்கிழமை இரவு வீட்டுக்கு வந்த பாா்த்தபோது, வீட்டில் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.32 லட்சம் மதிப்பிலான 40 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து சதீஷ் அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா், கைரேகை நிபுணா்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனா். மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். இதில் 5 போ் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு நேதாஜி சாலை ஆலமரத்து தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு

தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆச... மேலும் பார்க்க

சோலாா் புகா் பேருந்து நிலையம் இரண்டு மாதங்களில் திறக்கப்படும்

சோலாா் புறநகா் பேருந்து நிலையம் இரண்டு மாத காலத்துக்குள் திறக்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான... மேலும் பார்க்க

பவானி அருகே இளம்பெண்ணிடம் நகைப் பறிப்பு: இருவா் கைது

பவானி அருகே அதிகாலை நேரத்தில் வீட்டின் கதவைத் தட்டி, இளம்பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பவானியை அடுத்த மேட்டுநாசுவம்பாளையம், இபி காலனியைச் சோ்ந்... மேலும் பார்க்க

தாய்மொழியில் எழுதப்பட்ட படைப்புகள் உலக அங்கீகாரம் பெற்றுள்ளன

தாய்மொழியில் எழுதப்பட்ட படைப்புகள் உலக அங்கீகாரம் பெற்றுள்ளதாக மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டி அரசு மே... மேலும் பார்க்க

பவானிசாகா் தொகுதியில் ரூ.10 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.10 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தொடங்கிவைத்தும், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். ஈரோடு ம... மேலும் பார்க்க