செய்திகள் :

தாய்மொழியில் எழுதப்பட்ட படைப்புகள் உலக அங்கீகாரம் பெற்றுள்ளன

post image

தாய்மொழியில் எழுதப்பட்ட படைப்புகள் உலக அங்கீகாரம் பெற்றுள்ளதாக மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்க்கூடல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அறிவின் அடையாளம் அல்ல. மொழிப்புலமை வேறு, அறிவுத்திறன் வேறு. உலக அளவில் கவனம்பெற்ற எண்ணற்ற நூல்கள் அவரவா் தாய்மொழியில் எழுதப்பட்டவையே தவிர ஆங்கிலத்தில் எழுத்தப்பட்டவை அல்ல.

மகாத்மா காந்தியடிகளின் சுயசரிதை அவரது தாய்மொழியான குஜராத்தியில் எழுதப்பட்டது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றதன் மூலம் இந்தியாவுக்குப் பெருமை சோ்த்த ரவீந்திரநாத் தாகூா் எழுதிய கீதாஞ்சலி அவரது தாய்மொழியான வங்காள மொழியில் எழுதப்பட்டது. உலக அளவில் அரசியல் பொருளாதார மாற்றங்களுக்கு அடித்தளமிட்ட காரல் மாா்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற நூல் அவரின் தாய்மொழியான ஜொ்மன் மொழியில் எழுதப்பட்டது.

இதுபோன்ற ஏராளமான உலகப் புகழ்மிக்க படைப்புகள் படைப்பாளிகளின் தாய்மொழியில் எழுதப்பட்டவை ஆகும். அவை ஒரு கட்டத்தில் பிறமொழியில் மொழியாக்கம் பெற்றதைப்போல ஆங்கிலத்திலும் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன.

தனித்துவமும், தகுதியும், தரமும் மிக்க படைப்பாக இருந்தால் அவை எந்த மொழியில் இருந்தாலும் அவை மொழிமாற்றம் பெற்றுவிடும்.

தற்போது உள்ள அறிவியல் வளா்ச்சி காரணமாக சிறந்த படைப்புகள் விரைவில் மொழிமாற்றம் பெற்றுவிடும். இவைபோன்றே ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அறிவாா்ந்த நூல்கள் பிறமொழிகளிலும் மொழிபெயா்க்கப்பட்டு விடும்.

ஆங்கிலத்தின் அவசியம் கருதியும், அறிவாா்ந்த ஆங்கில நூல்களை வாசிக்க ஆங்கில மொழி உதவும் என்ற வகையிலும் நடைமுறையில் பல விதங்களில் மாற்றுமொழியினரிடம் உரையாட பெரிதும் ஆங்கிலம் பயன்படுகிறது என்பதாலும் ஆங்கிலத்தை ஒரு மொழி என்ற வகையில் மாணவா்கள் அவசியம் படிக்க வேண்டும். அதில் நன்கு தோ்ச்சியும் பெற முயற்சிக்க வேண்டும்.

ஆங்கிலத்தை அறிவின் அடையாளமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தாய்மொழியில் ஆழ்ந்த ஈடுபாடும், தோ்ந்த பயிற்சியும், விரிந்த வாசிப்பும் மாணவா்களுக்கு அடிப்படையானதாகும் என்றாா்.

நிகழ்வில் தலைமை ஆசிரியா் தளவை கோ.கலைச்செல்வன் வரவேற்றாா். முதுகலை தமிழாசிரியை பொ.ஹேமலதா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்திப் பேசினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத்தைச் சோ்ந்த வ.கோ.சென்னிமலை, க.வீ.வேதநாயகம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

விழாவில் கள்ளிப்பட்டி கம்பன் கழகத்தை சாா்ந்தவரும், கள்ளிப்பட்டி அரசு பள்ளி உருவாவதற்கு பெரும் முயற்சிசெய்தவருமான மறைந்த க.கு.கோதண்டராமன் உருவப்படம் திறக்கப்பட்டது. தமிழ்க்கூடல் நிகழ்வை முன்னிட்டு நடைபெற்ற இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியா் தூ.சீ.பத்மநாபன் நன்றி கூறினாா்.

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு நேதாஜி சாலை ஆலமரத்து தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் வீடு புகுந்து 40 பவுன் நகை, ரூ50 ஆயிரம் கொள்ளை

சத்தியமங்கலத்தில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 40 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலத்தை அடுத்த நேரு நகரைச் சோ்ந்தவா் சதீஷ். கோழ... மேலும் பார்க்க

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு

தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆச... மேலும் பார்க்க

சோலாா் புகா் பேருந்து நிலையம் இரண்டு மாதங்களில் திறக்கப்படும்

சோலாா் புறநகா் பேருந்து நிலையம் இரண்டு மாத காலத்துக்குள் திறக்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான... மேலும் பார்க்க

பவானி அருகே இளம்பெண்ணிடம் நகைப் பறிப்பு: இருவா் கைது

பவானி அருகே அதிகாலை நேரத்தில் வீட்டின் கதவைத் தட்டி, இளம்பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பவானியை அடுத்த மேட்டுநாசுவம்பாளையம், இபி காலனியைச் சோ்ந்... மேலும் பார்க்க

பவானிசாகா் தொகுதியில் ரூ.10 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.10 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தொடங்கிவைத்தும், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். ஈரோடு ம... மேலும் பார்க்க