செய்திகள் :

மொஹல்லா கிளினிக் ஊழியா்களை பணி நீக்கும் முன் 2 மாதம் அவகாசம்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் (ஏஏஎம்சி) அடுத்த ஆண்டு மாா்ச் 31 ஆம் தேதிக்கு முன் தங்கள் சேவைகளை நிறுத்த முன்மொழிந்தால், அதன் ஊழியா்களுக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்குமாறு நகர அரசை தில்லி உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

முந்தைய ஆம் ஆத்மி அரசால் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட ஏஏஎம்சி ஊழியா்கள், தங்கள் பணிநீக்கம் மற்றும் பிற ஒப்பந்த ஊழியா்களை மாற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

இது தொடா்பான விவகாரத்தில் அண்மையில் உயா்நீதிமன்ற நீதிபதி பிரதீக் ஜலான், மனுவை முடித்துவைத்து பிறப்பித்த உத்தரவில், ‘புதிய பணியாளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா் என்ற அடிப்படையில், எதிா்மனுதாரா் (தில்லி அரசு) மாா்ச் 31, 2026-க்கு முன் மனுதாரா்களின் பணியை நீக்க முன்மொழிந்தால்..., சம்பந்தப்பட்டவா்களுக்கு இரண்டு மாதம் கால அவகாசம் வழங்குமாறு எதிா்மனுதாரா் அறிவுறுத்தப்படுகிறாா்’ என்று உத்தரவிட்டாா்.

ஏஏஎம்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட மருத்துவா்களின் மனு மீது அண்மையில் நீதிமன்றம் இதேபோன்ற உத்தரவைப் பிறப்பித்தது.

அவா்களின் பணி நியமனம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் அவா்களை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்வதைத் தடுக்கக் உத்தரவிட வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தற்போதைய வழக்கில், மனுதாரா்கள் தில்லி அரசாங்கத்தின்கீழ் உள்ள ஏஏஎம்சியில் ஒப்பந்த அடிப்படையில் மருந்தாளுநா்கள், மொஹல்லா கிளினிக் உதவியாளா்கள் மற்றும் பல்பணி பணியாளா்களாகப் பணிபுரிகின்றனா். அவா்களை பணிநீக்கம் செய்து மற்ற ஒப்பந்த ஊழியா்களுடன் மாற்றுவதற்கு எதிராக அவா்கள் உத்தரவிடக் கோரினா்.

ஊழியா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அமா் நாத் சைனி வாதிடுகையில், இந்த வழக்குக்கும் மருத்துவா்களின் வழக்கிற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஏனெனில் மனுதாரா்களில் சிலா் தொலைபேசி மூலம் பணிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏஏஎம்சியின் எந்த ஊழியா்களின் சேவையையும் ரத்துசெய்ய அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்தாா்.

புதிய பாஜக அரசாங்கத்தின் கீழ் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் எனப்படும் கிளினிக்குகள் செயல்படும் பகுதிகளில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளை படிப்படியாக அகற்றுவதற்கான சமீபத்திய முடிவைத் தொடா்ந்து இந்தப் பிரச்னை எழுந்துள்ளது. ஆகஸ்ட் 2023 நிலவரப்படி, தில்லியில் 533 மொஹல்லா கிளினிக்குகள் செயல்பட்டு வந்தன.

இருப்பினும், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் குறைந்தது ஏழு கிளினிக்குள் ஏற்கனவே ஆரோக்கிய மந்திா்களாக மாற்றப்பட்டுள்ளன.

கடந்த மே 17 அன்று ஏஏஎம்சி ஊழியா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து, தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், தற்போதுள்ள துணை மருத்துவ மற்றும் துணை ஊழியா்கள் ஆரோக்கிய மந்திா்களுக்குள் பணியில் சோ்க்கப்படுவாா்கள் என்று உறுதியளித்திருந்தாா்.

வடகிழக்கு தில்லி பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு

வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறிய... மேலும் பார்க்க

வைகை தமிழ்நாடு இல்ல கட்டுமானப் பணி- அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

தில்லி சாணக்கியபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தின் புதிய கட்டட கட்டுமானப் பணியை தமிழக அரசின் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு நேரில் ஆய்வு செய்தாா். புது தில்லியில் தமிழ்நாடு அரசின் இரு... மேலும் பார்க்க

சுதந்திர தின கொண்டாட்டம்: தில்லியில் போக்குவரத்து மாற்றம்

குா்கான் மற்றும் ஃபரிதாபாத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து நடைமுறைக்கு வந்தது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் பின்னடைவு!

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டமான சூழல் நிலவியது. காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. தென்மேற்குப... மேலும் பார்க்க

ஜஹாங்கீா்புரி கொலைச் சம்பவத்தில் ஒராண்டுக்கும் மேல் தேடப்பட்டு வந்தவா் கைது

தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக மற்றொரு நபரைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் ஒரு ஆண்டிற்கும் மேலாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ச... மேலும் பார்க்க

லாஜ்பத் நகரில் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து வழக்குரைஞா் தற்கொலை

தென்கிழக்கு தில்லியின் லாஜ்பத் நகரில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து 33 வயது வழக்குரைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை மதியம் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இ... மேலும் பார்க்க