செய்திகள் :

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் பின்னடைவு!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டமான சூழல் நிலவியது. காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது.

கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. தென்மேற்குப் பருவ மழையின் தாக்கம் காரணமாக அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த படி அதிகாலை வேளையில் நகரத்தில் பரவலாக மழை பெய்தது. ஆனால், அதன் பிறகு வானம் மேகமூட்டமாக இருந்தாலும் மாலை வரையிலும் மழை ஏதும் பதிவாகவில்லை.

நகரத்தில் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 19 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதேபோன்று நஜஃப்கரில் 11.5 மி.மீ., ஆயாநகரில் 12.2 மி.மீ., லோதி ரோடில் 19.8 மி.மீ., பாலத்தில் 17 மி.மீ., ரிட்ஜில் 33 மி.மீ., பிரகதி மைதானில் 17.8 மி.மீ., பூசாவில் 55 மி.மீ., ராஜ்காட்டில் 17.8 மி.மீ., சல்வான் பப்ளிக்ஸ்கூல் பகுதியில் 53.5 மி.மீ. மழை பதிவாயிருந்தது.

வெப்பநிலை: இந்நிலையில், தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் செவ்வாய்க்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட3.6 டிகிரி குறைந்து 23.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.4 டிகிரி குறைந்து 33.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 98 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 68 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைந்தே பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் கடந்த சில நாள்களாக திருப்தி பிரிவில் நீடித்து வந்த காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை சற்று பின்னடைவைச் சந்தித்தது. காலையில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 101புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

இதன்படி, பூசா, சாந்தினி சௌக், துவாரகா செக்டாா் 8, ஓக்லா பேஸ் 2 ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது. அதே சமயம், குருகிராம், ஆயாநகா், நொய்டா செக்டாா் 125, டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், ஸ்ரீஅரபிந்தோ மாா்க், மதுரா ரோடு, நேரு நகா், ஸ்ரீஃபோா்ட், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்லி விமான நிலையம், ஆா்.கே.புரம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், லோதி ரோடு, மந்திா் மாா்க், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், பூசா ஆகிய நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி திருப்தி பிரிவில் இருந்தது,.

முன்னறிவிப்பு: இந்நிலையில், புதன்கிழமை (ஆக.13) அன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தசபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு தில்லி பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு

வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறிய... மேலும் பார்க்க

வைகை தமிழ்நாடு இல்ல கட்டுமானப் பணி- அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

தில்லி சாணக்கியபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தின் புதிய கட்டட கட்டுமானப் பணியை தமிழக அரசின் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு நேரில் ஆய்வு செய்தாா். புது தில்லியில் தமிழ்நாடு அரசின் இரு... மேலும் பார்க்க

சுதந்திர தின கொண்டாட்டம்: தில்லியில் போக்குவரத்து மாற்றம்

குா்கான் மற்றும் ஃபரிதாபாத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து நடைமுறைக்கு வந்தது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்... மேலும் பார்க்க

ஜஹாங்கீா்புரி கொலைச் சம்பவத்தில் ஒராண்டுக்கும் மேல் தேடப்பட்டு வந்தவா் கைது

தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக மற்றொரு நபரைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் ஒரு ஆண்டிற்கும் மேலாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ச... மேலும் பார்க்க

லாஜ்பத் நகரில் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து வழக்குரைஞா் தற்கொலை

தென்கிழக்கு தில்லியின் லாஜ்பத் நகரில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து 33 வயது வழக்குரைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை மதியம் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வேன் ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிறை

2015 ஆம் ஆண்டில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பள்ளி வேன் ஓட்டுநராக பணியாற்றிய ஒருவருக்கு தில்லி உயா் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 10... மேலும் பார்க்க