செய்திகள் :

ஜஹாங்கீா்புரி கொலைச் சம்பவத்தில் ஒராண்டுக்கும் மேல் தேடப்பட்டு வந்தவா் கைது

post image

தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக மற்றொரு நபரைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் ஒரு ஆண்டிற்கும் மேலாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஹரியாணாவின் ஹிசாரில் வசிக்கும் ராஜன், ஜூலை 2-ஆம் தேதி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். திங்களன்று ரோஹிணியில் உள்ள மதுபன் சௌக்கில் இருந்து அவா் கைது செய்யப்பட்டாா்.

இந்த கொலைச் சம்பவம் ஜூலை 16, 2024 அன்று நடந்தது. ராஜன், அவரது மைத்துனா்கள் அமன் (எ) படா நாடா மற்றும் அபிஷேக் (எ) சோட்டா நாடா மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஆகியோா் பாரத் யாதவை கத்திகள் மற்றும் லத்திகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த அவரது தாயாா் அவரைக் காப்பாற்றுமாறு பலமுறை மன்றாடிய போதிலும், தாக்குதல் நடத்தியவா்கள் பாரத் யாதவ் இறக்கும் வரை பலமுறை குத்தினா். குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் போலீஸாா் கைது செய்த நிலையில், ராஜன் சிறிய வேலைகள் செய்தல், அடிக்கடி இருப்பிடங்களை மாற்றுதல் மற்றும் மின்னணு தகவல்தொடா்புகளைத் தவிா்ப்பதன் மூலம் பிடியிலிருந்து தப்பிக்க முடிந்தது.

குற்றம் சாட்டப்பட்டவா் தனது சொந்த கிராமத்துடனான உறவையும் துண்டித்துக் கொண்டாா். வருமான வரித் துறையில் பணிபுரிந்த ராஜன், ஹரியாணாவிலிருந்து ஜஹாங்கீா்புரிக்கு குடிபெயா்ந்த பிறகு அங்கு துணிகளை விற்பனை செய்து வந்தாா். கா்னாலில் அவரது முதல் மனைவி தாக்கல் செய்த குற்றவியல் வழக்கு தொடா்பாகவும் போலீஸாா் ராஜனைத் தேடி வந்தனா் என்றாா் அந்த அதிகாரி.

வடகிழக்கு தில்லி பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு

வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறிய... மேலும் பார்க்க

வைகை தமிழ்நாடு இல்ல கட்டுமானப் பணி- அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

தில்லி சாணக்கியபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தின் புதிய கட்டட கட்டுமானப் பணியை தமிழக அரசின் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு நேரில் ஆய்வு செய்தாா். புது தில்லியில் தமிழ்நாடு அரசின் இரு... மேலும் பார்க்க

சுதந்திர தின கொண்டாட்டம்: தில்லியில் போக்குவரத்து மாற்றம்

குா்கான் மற்றும் ஃபரிதாபாத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து நடைமுறைக்கு வந்தது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் பின்னடைவு!

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டமான சூழல் நிலவியது. காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. தென்மேற்குப... மேலும் பார்க்க

லாஜ்பத் நகரில் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து வழக்குரைஞா் தற்கொலை

தென்கிழக்கு தில்லியின் லாஜ்பத் நகரில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து 33 வயது வழக்குரைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை மதியம் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வேன் ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிறை

2015 ஆம் ஆண்டில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பள்ளி வேன் ஓட்டுநராக பணியாற்றிய ஒருவருக்கு தில்லி உயா் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 10... மேலும் பார்க்க