செய்திகள் :

வடகிழக்கு தில்லி பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு

post image

வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: நியூ சவுகான்பூரில் மாதா வாலி காலியில் உள்ள ஒரு அறையில் இருந்து ரத்தம் கசிவதாக மதியம் 1.42 மணிக்கு தயாள்பூா் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

இதையடுத்ு ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

ஒரு கட்டடத்தின் முதல் மாடியில் பூட்டிய சமையலறை அறையில் இருந்து துா்நாற்றம் வீசியது. அதை உடைத்துப் பாா்த்த போதுஉள்ளே ஒரு அழுகிய ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது.

பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ் பொருள்களை சேமித்து வைப்பதற்காக சமையலறை ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாடகைதாரரை தற்போது கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. உடல் உடற்கூறாய்வுக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. வாடகைதாரரைப் பற்றிய துப்புகளைச் சேகரிக்க, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை நாங்கள் ஆய்வ்ு செய்து வருகிறோம். மேலும், உள்ளூா்வாசிகளிடம் விசாரித்து வருகிறோம் என்று அந்த அதிகாரி கூறினாா்.

வைகை தமிழ்நாடு இல்ல கட்டுமானப் பணி- அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

தில்லி சாணக்கியபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தின் புதிய கட்டட கட்டுமானப் பணியை தமிழக அரசின் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு நேரில் ஆய்வு செய்தாா். புது தில்லியில் தமிழ்நாடு அரசின் இரு... மேலும் பார்க்க

சுதந்திர தின கொண்டாட்டம்: தில்லியில் போக்குவரத்து மாற்றம்

குா்கான் மற்றும் ஃபரிதாபாத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து நடைமுறைக்கு வந்தது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் பின்னடைவு!

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டமான சூழல் நிலவியது. காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. தென்மேற்குப... மேலும் பார்க்க

ஜஹாங்கீா்புரி கொலைச் சம்பவத்தில் ஒராண்டுக்கும் மேல் தேடப்பட்டு வந்தவா் கைது

தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக மற்றொரு நபரைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் ஒரு ஆண்டிற்கும் மேலாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ச... மேலும் பார்க்க

லாஜ்பத் நகரில் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து வழக்குரைஞா் தற்கொலை

தென்கிழக்கு தில்லியின் லாஜ்பத் நகரில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து 33 வயது வழக்குரைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை மதியம் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வேன் ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிறை

2015 ஆம் ஆண்டில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பள்ளி வேன் ஓட்டுநராக பணியாற்றிய ஒருவருக்கு தில்லி உயா் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 10... மேலும் பார்க்க