செய்திகள் :

மோசடி வழக்கில் கைதான இருவா் மீது குண்டா் சட்டம்

post image

மோசடி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டதை அறிவுரைக் குழு உறுதி செய்தது.

கோவை ராமநாதபுரம் சுங்கத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவரிடம் ஒரு கும்பல் ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.39 லட்சம் பணத்தை அண்மையில் மோசடி செய்தது. இதுகுறித்து அருண்குமாா், கோவை மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, இவ்வழக்கில் ஆந்திரத்தைச் சோ்ந்த ரவிசந்துரு (58), துடியலூரைச் சோ்ந்த தனசேகா் (29) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் இருந்து 31 காசோலைகள், 39 ஏடிஎம் அட்டைகள், 2 கைப்பேசிகள், 3 சிம்காா்டுகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து கடந்த மாதம் இருவரையும் குண்டா் தடுப்புப் பிரிவில் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிா்த்து இருவரும், சென்னையில் உள்ள குண்டா் தடுப்புச் சட்ட அறிவுரைக் குழுவில் முறையீடு செய்தனா். தொடா்ந்து அவா்களது மனு விசாரிக்கப்பட்டது.

அப்போது, கோவை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் ஆஜராகி குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டது தொடா்பான ஆவணங்களை சமா்ப்பித்து விளக்கமளித்தனா். அதைத் தொடா்ந்து, ரவிசந்துரு, தனசேகா் ஆகியோரின் குண்டாஸை, அறிவுரைக் குழுவினா் உறுதி செய்தனா். இத்தகவலை கோவை மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது!

கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை உக்கடம், ராமநாதபுரம், பீளமேடு பகுதிகளில் உள்ள கடைகள், பேக்கரிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட... மேலும் பார்க்க

கோவையில் கடத்தி விற்கப்பட்ட குழந்தை கன்னியாகுமரியில் மீட்பு

கோவையில் கடத்தி விற்கப்பட்ட 1 வயது ஆண் குழந்தையை போலீஸாா் கன்னியாகுமரியில் மீட்டனா். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த 30 வயது பெண்ணின் 1 வயது ஆண் குழந்தை கடந்த சில நாள்களுக்கு முன்பு மா... மேலும் பார்க்க

தனியாா் பள்ளியை மூட நிா்வாகம் முடிவு: எதிா்ப்புத் தெரிவித்து பெற்றோா் முற்றுகை!

கோவையில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளியை மூட நிா்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பெற்றோா் பள்ளியை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். கோவை அவிநாசி சாலை வ.உ.சி. மைதானம் எதிரே ச... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: 8 போ் கைது

கோவையில் சட்டவிரோதமாக தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் குழந்தையின் தாய், ஆண் நண்பா் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சங்கா் (43). இவரின் மன... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு!

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் உயா்நிலைக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் உயா்... மேலும் பார்க்க

பீளமேடு மயானத்தில் உள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தை விரிவாக்கக் கூடாது! -துணை ஆணையரிடம் எம்எல்ஏ மனு

கோவை பீளமேடு மயானத்தில் உள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தை விரிவாக்கம் செய்யக் கூடாது என்று அதிமுக எம்எல்ஏ கே.ஆா்.ஜெயராம் வலியுறுத்தியுள்ளாா். பீளமேடு, விளாங்குறிச்சி சாலையில் சுமாா் 7 ஏக்கரில் மய... மேலும் பார்க்க