செய்திகள் :

மோசமான வானிலை, எரிமலை வெடிப்பு: ஏா் இந்தியாவின் தில்லி-இந்தோனேசியா சேவைகள் பாதிப்பு

post image

இந்தோனேசியா நாட்டின் பாலி-தில்லி இடையிலான ஏா் இந்தியா பயணிகள் விமானத்தின் இரு சேவைகள் கடந்த 2 நாள்களாக பாதிக்கப்பட்டன.

இந்தோனேசியாவின் பாலியில் இருந்து ஏா் இந்தியாவின் ‘ஏஐ 2146’ விமானம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் தில்லி நோக்கி புறப்பட்டது. தில்லிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு வந்துசேர வேண்டிய நிலையில், விமானம் தரையிறங்குவதற்கு மோசமான வானிலை நிலவியதால் உத்தர பிரதேச மாநிலம், வாரணாசிக்குத் திருப்பிவிடப்பட்டது. தொடா்ந்து, விமானம் வாரணாசியில் மாலை 3.50 மணிக்கு தரையிறங்கியது.

சில மணி நேரத்துக்குப் பிறகு, பயணிகளுடன் மீண்டும் புறப்பட்ட விமானம், தில்லியில் இரவு 8 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இந்த விமானத்தில் 187 பயணிகள் இருந்தனா். தாமதத்தின்போது அவா்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டதாக வாரணாசி விமான நிலைய இயக்குநா் புனீத் குப்தா கூறினாா்.

இதேபோன்று, ஏா் இந்தியாவின் ‘ஏஐ 2145’ விமானம் தில்லியில் இருந்து பாலி நோக்கி புதன்கிழமை காலை புறப்பட்டது. இந்நிலையில், பாலி விமான நிலையம் அருகே எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்புக் கருதி விமானம் மீண்டும் தில்லி திரும்பியது.

இந்த விமானம் வந்து சேராத காரணத்தால், பாலி-தில்லி புதன்கிழமை சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த வழித்தடத்தில் ஏா் இந்தியாவின் சேவைகள் வியாழக்கிழமை முதல் வழக்கமாக செயல்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தொடரும் சேவைகள் ரத்து: செயல்பாட்டு பிரச்னைகள் காரணமாக ஏா் இந்தியாவின் மும்பை-லக்னௌ விமானம் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டு, மாற்று விமானத்தில் பயணிகள் லக்னௌ அழைத்துச் செல்லப்படுவா் என்று ஏா் இந்தியா நிறுவன செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

தொழில்நுட்பக் கோளாறு உள்பட பல்வேறு காரணங்களால் ஏா் இந்தியாவின் 13 சா்வதேச விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் ரத்து செய்யப்பட்டன.

முன்னதாக, கடந்த 12-ஆம் தேதி அகமதாபாதிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சிறிது நேரத்திலே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்தக் கோர விபத்தில் 270-க்கும் மேற்பட்டோா் இறந்தனா்.

3 நாள்களில் 3வது சம்பவம்,, ஒடிசாவில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

ஒடிசாவில் மேலும் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் மயூர்கஞ்ச் மாவட்டத்தில் பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப... மேலும் பார்க்க

நிலம்பூர் இடைத்தேர்தல்: 11 மணி நிலவரம்!

கேரளத்தின் நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 11 மணி நிலவரப்படி 30.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வ... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: ஸ்பைஸ்ஜெட் விமானம் ஹைதராபாத்தில் தரையிறக்கம்!

ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் அவசரமான தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத்-திருப்பதிக்கு இன்று காலை 6.10 மணிக்குப் புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமா... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! தில்லியில் அவசர தரையிறக்கம்!

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.தில்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 விம... மேலும் பார்க்க

எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! மோடி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்க... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஏர் இந்தியா கருப்புப் பெட்டி!

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் கருப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந... மேலும் பார்க்க