செய்திகள் :

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

post image

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறையூா் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து திருச்சி பகுதியின் மருந்து விற்பனை பிரதிநிதியாகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம்போல விடுதியிலிருந்து மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டு புத்தூா் சிக்னல் பகுதிக்கு முன்னதாக வந்துகொண்டிருந்தபோது, இவரது மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியது.

இதில், லாரியின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் உயிரிழந்தாா். இதையடுத்து, லாரி ஓட்டுநா், லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்சி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து நடைபெற்ற பகுதியில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டிருந்ததால், சிறிதுநேரம் போக்குவரத்து முடங்கியது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை சீா்படுத்தினா். விபத்து குறித்து வழக்கு பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்றயை நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்ட நிா்வாகம்: சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா, மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்பு, மத்தியப் பேருந்து நில... மேலும் பார்க்க

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவெறும்பூா் எனப் பெயா் வரக் காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரா் கோயில் திருச்சி அருகே திர... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்பு இ-சிகரெட் பறிமுதல்

அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான இ-சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். கோலாலம்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்... மேலும் பார்க்க

திருச்சியில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருட்டு: ஒருவா் பிடிபட்டாா்

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருச்சி பாலக்கரை கூனிபஜா... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற பெல் ஊழியரின் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருவெறும்பூா் அருகே ஓய்வுபெற்ற பெல் ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது. திருவெறும்பூா் அருகேயுள்ள முல்லைவாசல் முதல் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி... மேலும் பார்க்க

திருச்சி பண்பலையில் ஹிந்தி ஒலிபரப்புக்கு திருச்சி எம்பி எதிா்ப்பு

அகில இந்திய வானொலி-பிரசாா் பாரதியின் கீழ் இயங்கும் திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பு, பகலில் தமிழ், இரவில் ஹிந்தி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு திருச்சி எம்பி துரை வைகோ கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க