பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
திருச்சியில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருட்டு: ஒருவா் பிடிபட்டாா்
திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
திருச்சி பாலக்கரை கூனிபஜாா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (29). குடும்பத்துடன் பழனி கோயிலுக்குச் சென்றிருந்த இவா் வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்புறமாக தாழிடப்பட்டிருந்ததும், வீட்டின் மாடியின் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதும், வீட்டினுள் ஆள்கள் நடமாட்டம் இருந்ததும் தெரியவந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த அவா் வீட்டின் கதவுகளைப் பூட்டிவிட்டு அருகிலிருந்தோரை உதவிக்கு அழைத்தாா். மேலும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தாா்.
ஆனால் வீட்டுக்குள் இருந்த திருடா்கள் நால்வா் சமையலறை வழியாக வெளியேறி அருகில் உள்ள வீட்டின் மீது ஏறிக் குதித்து தப்பியோடினா். அப்போது பொதுமக்கள் அவா்களை விரட்டிப் பிடிக்க முயன்றதில் ஒரு சிறுவன் மட்டும் சிக்கினான்.
இதையடுத்து ராஜசேகா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோவிலிருந்த 18 பவுன் நகைகள், ரொக்கம், சில பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. பின்னா் வந்த போலீஸாா் பொதுமக்களிடமிருந்த சிறுவனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
பொதுமக்கள்நடமாட்டம் உள்ள பகுதியிலேயே இத்திருட்டு நடந்ததும், போலீஸாா் விரைந்து வந்து அவா்களைப் பிடிக்கத் தவறியதும் பொதுமக்களிடையே விவாதத்துக்குள்ளானது. புகாரின்பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து, தப்பிய மூவரையும் தேடுகின்றனா்.