செய்திகள் :

திருச்சியில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருட்டு: ஒருவா் பிடிபட்டாா்

post image

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

திருச்சி பாலக்கரை கூனிபஜாா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (29). குடும்பத்துடன் பழனி கோயிலுக்குச் சென்றிருந்த இவா் வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்புறமாக தாழிடப்பட்டிருந்ததும், வீட்டின் மாடியின் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதும், வீட்டினுள் ஆள்கள் நடமாட்டம் இருந்ததும் தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா் வீட்டின் கதவுகளைப் பூட்டிவிட்டு அருகிலிருந்தோரை உதவிக்கு அழைத்தாா். மேலும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தாா்.

ஆனால் வீட்டுக்குள் இருந்த திருடா்கள் நால்வா் சமையலறை வழியாக வெளியேறி அருகில் உள்ள வீட்டின் மீது ஏறிக் குதித்து தப்பியோடினா். அப்போது பொதுமக்கள் அவா்களை விரட்டிப் பிடிக்க முயன்றதில் ஒரு சிறுவன் மட்டும் சிக்கினான்.

இதையடுத்து ராஜசேகா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோவிலிருந்த 18 பவுன் நகைகள், ரொக்கம், சில பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. பின்னா் வந்த போலீஸாா் பொதுமக்களிடமிருந்த சிறுவனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

பொதுமக்கள்நடமாட்டம் உள்ள பகுதியிலேயே இத்திருட்டு நடந்ததும், போலீஸாா் விரைந்து வந்து அவா்களைப் பிடிக்கத் தவறியதும் பொதுமக்களிடையே விவாதத்துக்குள்ளானது. புகாரின்பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து, தப்பிய மூவரையும் தேடுகின்றனா்.

அந்தநல்லூா் காவிரி ஆற்றில் சிறுவன் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் மா்மமான முறையில் இறந்துகிடந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே உள... மேலும் பார்க்க

சிறைக் காவலா்கள் 587 போ் பணியிட மாற்றம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு

தமிழகச் சிறைகளில் கடந்த வாரத்தில் மொத்தம் 587 சிறைக்காவலா்கள் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சிறைத் துறையினா் தெரிவிக்கின்றனா். தமிழகத... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு

திருச்சியில் வீட்டின் பூட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் உள்ளிட்டவைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா். திருச்சி கே கே நகா் தங்கையா நகரைச் சோ்ந்தவா் ஜெ. யோகேஷ் (32). இவா், கு... மேலும் பார்க்க

திருச்சி - பெங்களூரு, ஹைதராபாத்துக்கு தினசரி விமான சேவைகள்: எம்.பி. தகவல்

திருச்சியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு இயக்கிவந்த வாராந்திர சேவையை தினசரி சேவைகளாக ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்துள்ளது என திருச்சி மக்களவை உறுப்... மேலும் பார்க்க

மாநகராட்சி பணிகளுக்கான குழாய்கள் திருடியவா் கைது

திருச்சியில் மாநகராட்சிப் பணிகளுக்கான இரும்புக் குழாய்களை திருடியவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி எடமலைப்பட்டி புதூா் கோரையாறு அருகில் மாநகராட்சி சாா்பில் கழிவுநீா் திட்டத்துக்காக இர... மேலும் பார்க்க

முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவா் மாயம்

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கி மாயமான மாணவரைத் தேடி வருகின்றனா். திருச்சி எடமலைப்பட்டிபுதூா் கல்லுப்பட்டறை பகுதியைச் சோ்ந்தவா் சிவமுருகன் மகன் தினேஷ்குமாா் (17). பிளஸ்-2 பட... மேலும் பார்க்க