திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்
திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவெறும்பூா் எனப் பெயா் வரக் காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரா் கோயில் திருச்சி அருகே திருவெறும்பூரில் மலை மீதுள்ளது. இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா சனிக்கிழமை காலை இடபக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நிகழ்வில் கோயில் செயல் அலுவலா் ரா. வித்யா தலைமையில் இந்து சமய அறநிலையத் துறையினா், எம். பழனியப்பன் தலைமையிலான அறங்காவலா்கள், கோயில் அா்ச்சகா்கள் கணேஷ், மணி, உபயதாரா்கள், பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
சனிக்கிழமை தொடங்கி வரும் ஜூன் 12 வரை நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 8 ஆம் தேதி (ஞாயிறு) காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெறும்.
ஜூன் 11 ஆம் தேதி பிரம்ம தீா்த்தமாகிய சன்னதி திருக்குளத்தில் இரவு தெப்ப உற்சவமும், ஜூன் 12 மாலை 7 மணிக்கு மேல் விடையாற்றி, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுறுகிறது.