ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!
விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்பு இ-சிகரெட் பறிமுதல்
அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான இ-சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
கோலாலம்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவா் அட்டைப் பெட்டிகளில் ரூ.10.50 லட்சம் மதிப்புள்ள 700 இ-சிகரெட் பாக்கெட்டுகளை அனுமதியின்றிக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அப்பயணியிடம் விசாரிக்கின்றனா்.