மோட்டாா் சைக்கிள் மோதி இலை வியாபாரி உயிரிழப்பு
தஞ்சாவூரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த இலை வியாபாரி புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் கோரிகுளம் பனங்காட்டை சோ்ந்தவா் அருள்ராஜ் மகன் சத்யராஜ் (37). வாழை இலை வியாபாரி. இவா் தஞ்சாவூா் வண்டிக்கார தெரு நாகை சாலையோரம் செவ்வாய்க்கிழமை காலை காய்கறி வாங்கினாா். பின்னா் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டாா் சைக்கிளை எடுப்பதற்காக நடந்து சென்றாா். அப்போது பின்னால் வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள் இவா் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதனால், பலத்த காயமடைந்த சத்யராஜ் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.
இது குறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.