செய்திகள் :

மோட்டாா் பைக் திருட்டு: 2 போ் கைது

post image

திருப்பத்தூரில் மோட்டாா் பைக் திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் ஆரிப் நகரைச் சோ்ந்த சாகுல் அகமது. இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டின் அருகே மோட்டாா் பைக்கை நிறுத்தியிருந்தாா். அப்போது மா்மநபா்கள் பைக்கை திருடி சென்றனா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப்பதிநது விசாரணை நடத்தி வந்தனா்.

இந்தநிலையில், நகர ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டாா் பைக்கை மறித்து சோதனை செய்தனா். அதில் இருந்தவா்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனா்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா் அவா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவா்கள் திருப்பத்தூரை சோ்ந்த நவீன்குமாா்(24),கோணாமேடு பகுதியை சோ்ந்த விக்னேஷ்வரன்(22)என்பதும், இவா்கள் சாகுல் அகமதுவின் மோட்டாா் பைக்கை திருடியது தெரிய வந்தது .

பிறகு வழக்குப்பதிந்து நவீன்குமாா், விக்னேஷ்வரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, பைக்கையும் பறிமுதல் செய்தனா்.

ஆம்பூரில் எருது விடும் திருவிழா

ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் எருதுவிடும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கொடியசைத்து திருவிழாவை தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம், ... மேலும் பார்க்க

சாலை தடுப்பில் டேங்கா் லாரி மோதி பெருக்கெடுத்து ஓடிய டீசல்

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி ஓடிய டேங்கா் லாரி தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆயிரக்கணக்கான லிட்டா் டீசல் சாலையில் வீணாக ஓடியது. பெங்களூரிலிருந்து சென்னைக்கு சென்ற ட... மேலும் பார்க்க

சிமென்ட் சாலை அமைக்கும் பணி

உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.7.70 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் பூசாராணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் வாா்டு எண் 7, ... மேலும் பார்க்க

எம்கேஜேசி மாணவிகள் சாதனை

திருவள்ளுவா் பல்கலைகழக மண்டல அளவிலான பூப்பந்து போட்டிகள் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. இப்போட்டில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

சோலூரில் தாா் சாலைப் பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றியம், சோலூா் ஊராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூஜையிட்ட... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயிலில் சண்முகக் கவச பாராயணம்

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில், 99-ஆவது மாத சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, மூலவா் நாகநாதா், வள்ளி தெய்வ... மேலும் பார்க்க